All Surahs

Surah 82

الانفطار

Al-Infitar

82. ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)

19 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ

வானம் வெடித்து விடும்போது

2

وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ۟ۙ

மேலும், தாரகைகள் உதிர்ந்துவிடும்போது

3

وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ ۟ۙ

மேலும், கடல்கள் பிளக்கப்படும்போது

4

وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْ ۟ۙ

மேலும், அடக்கத்தலங்கள் திறந்துவிடப்படும்போது

5

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْ ۟ؕ

ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் அப்போது நன்கு அறிந்துகொள்வான்.

6

یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِ ۟ۙ

மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?

7

الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَ ۟ۙ

அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான்.

8

فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ۟ؕ

மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.

9

كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِ ۟ۙ

ஒருபோதும் அவ்வாறில்லை! மாறாக, (உண்மை யாதெனில்) கூலி கொடுக்கப்படுவதை நீங்கள் பொய்யெனத் தூற்றுகின்றீர்கள்.

10

وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ

நிச்சயமாக உங்கள் மீது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

11

كِرَامًا كَاتِبِیْنَ ۟ۙ

அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்;

12

یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟

உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அறிகின்றார்கள்.

13

اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ

திண்ணமாக, நல்லவர்கள் இன்பத்தில் திளைத்திருப் பார்கள்.

14

وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۚۖ

மேலும், சந்தேகமின்றி, தீயவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள்.

15

یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ ۟

கூலி கொடுக்கப்படும் நாளில், அதில் அவர்கள் நுழைவார்கள்.

16

وَمَا هُمْ عَنْهَا بِغَآىِٕبِیْنَ ۟ؕ

மேலும், அதிலிருந்து அவர்கள் காணாமல் போய்விட முடியாது.

17

وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ۙ

மேலும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று நீர் அறிவீரா?

18

ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ؕ

ஆம்! கூலி கொடுக்கப்படும் அந்நாள் எத்தகையது என்று உமக்குத் தெரியுமா, என்ன?

19

یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ وَالْاَمْرُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۟۠

அந்நாளில் எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தியிராது. தீர்ப்பு வழங்குவது, அந்நாளில் முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கும்.

PreviousAt-TakwirNextAl-Mutaffifin

0:00–:––