All Surahs

Surah 81

التكوير

At-Takwir

81. ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)

29 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۟

சூரியன் சுருட்டப்பட்டுவிடும்போது,

2

وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْ ۟

மேலும், தாரகைகள் உதிர்ந்து விடும்போது,

3

وَاِذَا الْجِبَالُ سُیِّرَتْ ۟

மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும்போது,

4

وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْ ۟

மேலும், பத்து மாத நிறைகர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விட்டு விடப்படும்போது,

5

وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْ ۟

மேலும், வன விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,

6

وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْ ۟

மேலும், கடல்கள் கொளுத்தப்படும்போது,

7

وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْ ۟

மேலும், உயிர்கள் (உடல்களுடன்) ஒன்றிணைக்கப்படும்போது,

8

وَاِذَا الْمَوْءٗدَةُ سُىِٕلَتْ ۟

மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது,

9

بِاَیِّ ذَنْۢبٍ قُتِلَتْ ۟ۚ

எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று

10

وَاِذَا الصُّحُفُ نُشِرَتْ ۟

மேலும், வினைச் சுவடிகள் விரிக்கப்படும்போது,

11

وَاِذَا السَّمَآءُ كُشِطَتْ ۟

மேலும், வானத் திரை அகற்றப்படும்போது,

12

وَاِذَا الْجَحِیْمُ سُعِّرَتْ ۟

மேலும், நரகம் எரிக்கப்படும்போது

13

وَاِذَا الْجَنَّةُ اُزْلِفَتْ ۟

மேலும், சுவனம் அருகே கொண்டு வரப்படும்போது,

14

عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْ ۟ؕ

அந்நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்து கொள்வான்.

15

فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِ ۟ۙ

அவ்வாறில்லை! மீண்டும் மீண்டும் திரும்பி வரக்கூடிய தாரகைகள்மீதும்,

16

الْجَوَارِ الْكُنَّسِ ۟ۙ

மறையக்கூடிய தாரகைகள் மீதும்,

17

وَالَّیْلِ اِذَا عَسْعَسَ ۟ۙ

விடை பெற்றுச் செல்லும் இரவின் மீதும்,

18

وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَ ۟ۙ

புலரும் வைகறையின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

19

اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۙ

உண்மையில், இது கண்ணியமிக்க தூதர் ஒருவரின் வாக்காகும்.

20

ذِیْ قُوَّةٍ عِنْدَ ذِی الْعَرْشِ مَكِیْنٍ ۟ۙ

அவர் வலிமையுடையவர்; அர்ஷுக்குரியவனிடம் உயர் மதிப்பு பெற்றவர்.

21

مُّطَاعٍ ثَمَّ اَمِیْنٍ ۟ؕ

அங்கு அவருடைய கட்டளை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவர் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றார்.

22

وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ ۟ۚ

மேலும், (மக்காவாசிகளே!) உங்கள் நண்பர் பைத்தியக்காரர் அல்லர்.

23

وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِیْنِ ۟ۚ

திண்ணமாக, அவர் அந்தத் தூதரை தெளிவான அடிவானத்தில் கண்டார்.

24

وَمَا هُوَ عَلَی الْغَیْبِ بِضَنِیْنٍ ۟ۚ

மேலும், அவர் மறைவான உண்மைகள் (எனும் இந்த அறிவை மக்களிடம் எடுத்துக்கூறும்) விஷயத்தில் கஞ்சர் அல்லர்.

25

وَمَا هُوَ بِقَوْلِ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ

மேலும், இது விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானின் சொல்லும் அன்று.

26

فَاَیْنَ تَذْهَبُوْنَ ۟ؕ

பின்னர், நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?

27

اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟ۙ

இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்;

28

لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّسْتَقِیْمَ ۟ؕ

உங்களில், நேர்வழியில் நடந்திட விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியது.

29

وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟۠

மேலும், நீங்கள் நாடுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, பிரபஞ்சம் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ் நாடாத வரையில்!

PreviousAbasaNextAl-Infitar

0:00–:––