All Surahs

Surah 80

عبس

Abasa

80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)

42 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

عَبَسَ وَتَوَلّٰۤی ۟ۙ

முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார்,

2

اَنْ جَآءَهُ الْاَعْمٰى ۟ؕ

அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக!

3

وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ

அவர் சீர்திருந்தக்கூடும்

4

اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى ۟ؕ

அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன?

5

اَمَّا مَنِ اسْتَغْنٰى ۟ۙ

எவன் அலட்சியம் செய்கின்றானோ

6

فَاَنْتَ لَهٗ تَصَدّٰى ۟ؕ

அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர்.

7

وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ

அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன?

8

وَاَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰى ۟ۙ

மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ

9

وَهُوَ یَخْشٰى ۟ۙ

(இறைவனை) அஞ்சியவராக

10

فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى ۟ۚ

அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்!

11

كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۟ۚ

அவ்வாறன்று! நிச்சயமாக, இது ஓர் அறிவுரையாகும்.

12

فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ۘ

எவர் விரும்புகின்றாரோஅவர் இதனை ஏற்றுக் கொள்ளட்டும்.

13

فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍ ۟ۙ

இது கண்ணியமிக்க,

14

مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍۭ ۟ۙ

உயர்வான, தூய்மையான ஏடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.

15

بِاَیْدِیْ سَفَرَةٍ ۟ۙ

(அந்த ஏடுகள்) எழுத்தர்களின் கைகளில் உள்ளன.

16

كِرَامٍ بَرَرَةٍ ۟ؕ

(அந்த எழுத்தர்கள்) கண்ணியம் மிகுந்தவர்கள், நல்லவர்கள்.

17

قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗ ۟ؕ

மனிதன் மீது சாபம் உண்டாகட்டும்! அவன் சத்தியத்தை எத்துணைக் கடுமையாக மறுப்பவனாய் இருக்கின்றான்!

18

مِنْ اَیِّ شَیْءٍ خَلَقَهٗ ۟ؕ

அல்லாஹ், அவனை எதிலிருந்து படைத்திருக்கின்றான்?

19

مِنْ نُّطْفَةٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۟ۙ

ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான்.

20

ثُمَّ السَّبِیْلَ یَسَّرَهٗ ۟ۙ

பிறகு, வாழ்வின் பாதையை அவனுக்கு எளிதாக்கினான்.

21

ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗ ۟ۙ

பிறகு, அவனை மரணமடையச் செய்தான்; மேலும், மண்ணறையில் கொண்டு சேர்த்தான்.

22

ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗ ۟ؕ

பிறகு, அவன் நாடும்போது அவனை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வான்.

23

كَلَّا لَمَّا یَقْضِ مَاۤ اَمَرَهٗ ۟ؕ

ஒருபோதுமில்லை! அல்லாஹ் அவன் மீது விதித்திருந்த கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை!

24

فَلْیَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤ ۟ۙ

பிறகு, மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும்.

25

اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۟ۙ

நிச்சயமாக, நாம் நீரை நிறையப் பொழிந்தோம்.

26

ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۟ۙ

பின்னர், வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம்.

27

فَاَنْۢبَتْنَا فِیْهَا حَبًّا ۟ۙ

பிறகு, அதில் தானியங்களையும்,

28

وَّعِنَبًا وَّقَضْبًا ۟ۙ

திராட்சைகளையும், காய்கறிகளையும்,

29

وَّزَیْتُوْنًا وَّنَخْلًا ۟ۙ

ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும்,

30

وَّحَدَآىِٕقَ غُلْبًا ۟ۙ

அடர்ந்த தோட்டங்களையும்,

31

وَّفَاكِهَةً وَّاَبًّا ۟ۙ

விதவிதமான கனிகளையும் மற்றும் புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம்,

32

مَّتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ

உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வதாராப் பொருட்களாகும் பொருட்டு!

33

فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ۟ؗ

இறுதியில், காதைச் செவிடாக்கும் அந்தப் பேரோசை முழங்கும்போது

34

یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِیْهِ ۟ۙ

அந்நாளில் மனிதன் விரண்டோடுவான் தன் சகோதரனை விட்டும்

35

وَاُمِّهٖ وَاَبِیْهِ ۟ۙ

தாயையும் தந்தையையும் விட்டும்

36

وَصَاحِبَتِهٖ وَبَنِیْهِ ۟ؕ

தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டும்.

37

لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ یَوْمَىِٕذٍ شَاْنٌ یُّغْنِیْهِ ۟ؕ

அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!

38

وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌ ۟ۙ

சில முகங்கள் அந்நாளில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்;

39

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۟ۚ

சிரித்துக் கொண்டும் மலர்ச்சியுடனும் இருக்கும்.

40

وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ عَلَیْهَا غَبَرَةٌ ۟ۙ

மேலும், அந்நாளில் வேறு சில முகங்களில் புழுதி படிந்திருக்கும்.

41

تَرْهَقُهَا قَتَرَةٌ ۟ؕ

அவற்றில் இருளும் கருமையும் கப்பியிருக்கும்.

42

اُولٰٓىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ۟۠

அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்; தீயவர்கள்.

PreviousAn-NaziatNextAt-Takwir

0:00–:––