All Surahs

Surah 79

النازعات

An-Naziat

79. ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)

46 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ

ஆழ்ந்து பற்றியிழுக்கின்ற,

2

وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۟ۙ

மேலும், மெதுவாக வெளிக்கொணர்கின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக!

3

وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۟ۙ

மேலும், (பேரண்டத்தில்) அதிவேகமாக நீந்தித் திரிகின்ற

4

فَالسّٰبِقٰتِ سَبْقًا ۟ۙ

மேலும், (கட்டளைகளை நிறைவேற்றுவதில்) ஒருவருக்கொருவர் முந்துகின்றவர்கள் மீதும் சத்தியமாக!

5

فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۟ۘ

பிறகு (இறைக்கட்டளைகளுக்கிணங்க) விவகாரங்களை முறைப்படி நிர்வகித்து வருகின்றவர்கள் மீதும் சத்தியமாக!

6

یَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۟ۙ

எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ

7

تَتْبَعُهَا الرَّادِفَةُ ۟ؕ

அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ

8

قُلُوْبٌ یَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌ ۟ۙ

அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும்.

9

اَبْصَارُهَا خَاشِعَةٌ ۟ۘ

அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்துவிட்டிருக்கும்.

10

یَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِی الْحَافِرَةِ ۟ؕ

இந்த மக்கள் கூறுகின்றார்கள்: “நாம் (இறந்த பிறகு) உண்மையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்படு வோமா,

11

ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۟ؕ

இற்றுப்போன எலும்புகளாய் நாம் ஆனாலுமா?”

12

قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۟ۘ

இவர்கள் மேலும் கூறலானார்கள்: “அப்பொழுது இது பேரிழப்புக்குரிய திரும்பலாகத்தான் இருக்கும்.”

13

فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۟ۙ

உண்மையில், இது ஓர் உரத்த அதட்டலாகத்தான் இருக்கும்.

14

فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ۟ؕ

உடனே, இவர்கள் வெட்ட வெளியில் ஆஜராகி இருப்பார்கள்!

15

هَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ

மூஸாவின் வரலாறு உமக்குக் கிடைத்ததா?

16

اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًی ۟ۚ

‘துவா’ எனும் புனிதப் பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்துக் கூறினான்:

17

اِذْهَبْ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟ؗۖ

“ஃபிர்அவ்னிடம் செல்வீராக! திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டான்.

18

فَقُلْ هَلْ لَّكَ اِلٰۤی اَنْ تَزَكّٰی ۟ۙ

எனவே, நீர் (அவனிடம்) கூறும்: நீ தூய்மை பெற விரும்புகின்றாயா?

19

وَاَهْدِیَكَ اِلٰی رَبِّكَ فَتَخْشٰی ۟ۚ

மேலும், உன் இறைவனின் பக்கம் செல்லும் வழியினை நான் உனக்குக் காண்பிக்கட்டுமா? அதன் மூலம் (அவனைக் குறித்து) உனக்குள் அச்சம் ஏற்படும்!”

20

فَاَرٰىهُ الْاٰیَةَ الْكُبْرٰی ۟ؗۖ

பிறகு, (மூஸா ஃபிர்அவ்னிடம் சென்று) அவனுக்குப் பெரும் சான்றினைக் காண்பித்தார்.

21

فَكَذَّبَ وَعَصٰی ۟ؗۖ

ஆனால், அவன் அதனைப் பொய் எனக் கூறினான். மேலும், அவன் ஏற்க மறுத்தான்.

22

ثُمَّ اَدْبَرَ یَسْعٰی ۟ؗۖ

பின்னர் சூழ்ச்சிகள் செய்திடத் திரும்பினான்.

23

فَحَشَرَ فَنَادٰی ۟ؗۖ

மேலும், மக்களை ஒன்று திரட்டினான். அவர்களை அழைத்து,

24

فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰی ۟ؗۖ

“நான்தான் உங்களின் மாபெரும் இறைவன்” எனக் கூறினான்.

25

فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰی ۟ؕ

இறுதியில் அவனை மறுமை மற்றும் இம்மையின் வேதனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்தான்.

26

اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ یَّخْشٰی ۟ؕ۠

அஞ்சி வாழும் ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் பெரும் படிப்பினை இருக்கின்றது.

27

ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰىهَا ۟ۙ

உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா?

28

رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَا ۟ۙ

அல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை நன்கு உயர்த்தினான். பிறகு அதைச் சமப்படுத்தினான்.

29

وَاَغْطَشَ لَیْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَا ۪۟

மேலும், அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான்.

30

وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَا ۟ؕ

இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்!

31

اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰىهَا ۪۟

அதனுள்ளிலிருந்து அதன் தண்ணீரையும் மேய்ச்சலுக்கானவற்றையும் வெளிக்கொணர்ந்தான்.

32

وَالْجِبَالَ اَرْسٰىهَا ۟ۙ

மேலும் (அதில்) மலைகளை ஊன்றி வைத்தான்;

33

مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ

உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருள்களாய் ஆகும் பொருட்டு!

34

فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰی ۟ؗۖ

எனவே, மாபெரும் அமளி தோன்றும்போது,

35

یَوْمَ یَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰی ۟ۙ

அன்று மனிதன் தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைத்துப் பார்ப்பான்.

36

وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِمَنْ یَّرٰی ۟

மேலும், பார்ப்பவர் ஒவ்வொருவர் கண்ணெதிரிலும் நரகம் திறந்து வைக்கப்படும்.

37

فَاَمَّا مَنْ طَغٰی ۟ۙ

எவன் வரம்பு மீறியிருந்தானோ

38

وَاٰثَرَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۙ

மேலும், உலக வாழ்வுக்கு முன்னுரிமை தந்தானோ

39

فَاِنَّ الْجَحِیْمَ هِیَ الْمَاْوٰی ۟ؕ

அவனுடைய இருப்பிடம் நரகமாகவே இருக்கும்.

40

وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَی النَّفْسَ عَنِ الْهَوٰی ۟ۙ

மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளைவிட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ

41

فَاِنَّ الْجَنَّةَ هِیَ الْمَاْوٰی ۟ؕ

அவனுடைய இருப்பிடம் சுவனமாக இருக்கும்.

42

یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ۟ؕ

“அந்த இறுதிநேரம் எப்பொழுது வரும்?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்.

43

فِیْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَا ۟ؕ

அந் நேரத்தைப் பற்றிக் கூறுவது உம்முடைய பணியல்ல!

44

اِلٰی رَبِّكَ مُنْتَهٰىهَا ۟ؕ

அதைப் பற்றிய ஞானமோ அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது.

45

اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ یَّخْشٰىهَا ۟ؕ

அந்நேரத்தை அஞ்சும் ஒவ்வொருவருக்கும் நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்.

46

كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَهَا لَمْ یَلْبَثُوْۤا اِلَّا عَشِیَّةً اَوْ ضُحٰىهَا ۟۠

இவர்கள் அதனைக் கண்டு கொள்ளும் நாளில், ஒரு பிற்பகல் அல்லது முற்பகல் வரையில் மட்டுமே (இவ்வுலகில் அல்லது மரணநிலையில்) தாங்கள் தங்கியிருந்தது போன்று அவர்களுக்குத் தோன்றும்.

PreviousAn-NabaNextAbasa

0:00–:––