عَبَسَ وَتَوَلّٰۤی ۟ۙ
முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார்,
Surah 80
Abasa
80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
42 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
عَبَسَ وَتَوَلّٰۤی ۟ۙ
முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார்,
اَنْ جَآءَهُ الْاَعْمٰى ۟ؕ
அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக!
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
அவர் சீர்திருந்தக்கூடும்
اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى ۟ؕ
அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன?
اَمَّا مَنِ اسْتَغْنٰى ۟ۙ
எவன் அலட்சியம் செய்கின்றானோ
فَاَنْتَ لَهٗ تَصَدّٰى ۟ؕ
அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர்.
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன?
وَاَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰى ۟ۙ
மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ
وَهُوَ یَخْشٰى ۟ۙ
(இறைவனை) அஞ்சியவராக
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى ۟ۚ
அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்!
كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۟ۚ
அவ்வாறன்று! நிச்சயமாக, இது ஓர் அறிவுரையாகும்.
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ۘ
எவர் விரும்புகின்றாரோஅவர் இதனை ஏற்றுக் கொள்ளட்டும்.
فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍ ۟ۙ
இது கண்ணியமிக்க,
مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍۭ ۟ۙ
உயர்வான, தூய்மையான ஏடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
بِاَیْدِیْ سَفَرَةٍ ۟ۙ
(அந்த ஏடுகள்) எழுத்தர்களின் கைகளில் உள்ளன.
كِرَامٍ بَرَرَةٍ ۟ؕ
(அந்த எழுத்தர்கள்) கண்ணியம் மிகுந்தவர்கள், நல்லவர்கள்.
قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗ ۟ؕ
மனிதன் மீது சாபம் உண்டாகட்டும்! அவன் சத்தியத்தை எத்துணைக் கடுமையாக மறுப்பவனாய் இருக்கின்றான்!
مِنْ اَیِّ شَیْءٍ خَلَقَهٗ ۟ؕ
அல்லாஹ், அவனை எதிலிருந்து படைத்திருக்கின்றான்?
مِنْ نُّطْفَةٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۟ۙ
ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான்.
ثُمَّ السَّبِیْلَ یَسَّرَهٗ ۟ۙ
பிறகு, வாழ்வின் பாதையை அவனுக்கு எளிதாக்கினான்.
ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗ ۟ۙ
பிறகு, அவனை மரணமடையச் செய்தான்; மேலும், மண்ணறையில் கொண்டு சேர்த்தான்.
ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗ ۟ؕ
பிறகு, அவன் நாடும்போது அவனை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வான்.
كَلَّا لَمَّا یَقْضِ مَاۤ اَمَرَهٗ ۟ؕ
ஒருபோதுமில்லை! அல்லாஹ் அவன் மீது விதித்திருந்த கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை!
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤ ۟ۙ
பிறகு, மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும்.
اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۟ۙ
நிச்சயமாக, நாம் நீரை நிறையப் பொழிந்தோம்.
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۟ۙ
பின்னர், வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம்.
فَاَنْۢبَتْنَا فِیْهَا حَبًّا ۟ۙ
பிறகு, அதில் தானியங்களையும்,
وَّعِنَبًا وَّقَضْبًا ۟ۙ
திராட்சைகளையும், காய்கறிகளையும்,
وَّزَیْتُوْنًا وَّنَخْلًا ۟ۙ
ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும்,
وَّحَدَآىِٕقَ غُلْبًا ۟ۙ
அடர்ந்த தோட்டங்களையும்,
وَّفَاكِهَةً وَّاَبًّا ۟ۙ
விதவிதமான கனிகளையும் மற்றும் புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம்,
مَّتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வதாராப் பொருட்களாகும் பொருட்டு!
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ۟ؗ
இறுதியில், காதைச் செவிடாக்கும் அந்தப் பேரோசை முழங்கும்போது
یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِیْهِ ۟ۙ
அந்நாளில் மனிதன் விரண்டோடுவான் தன் சகோதரனை விட்டும்
وَاُمِّهٖ وَاَبِیْهِ ۟ۙ
தாயையும் தந்தையையும் விட்டும்
وَصَاحِبَتِهٖ وَبَنِیْهِ ۟ؕ
தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டும்.
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ یَوْمَىِٕذٍ شَاْنٌ یُّغْنِیْهِ ۟ؕ
அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌ ۟ۙ
சில முகங்கள் அந்நாளில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்;
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۟ۚ
சிரித்துக் கொண்டும் மலர்ச்சியுடனும் இருக்கும்.
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ عَلَیْهَا غَبَرَةٌ ۟ۙ
மேலும், அந்நாளில் வேறு சில முகங்களில் புழுதி படிந்திருக்கும்.
تَرْهَقُهَا قَتَرَةٌ ۟ؕ
அவற்றில் இருளும் கருமையும் கப்பியிருக்கும்.
اُولٰٓىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ۟۠
அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்; தீயவர்கள்.