اَرَءَیْتَ الَّذِیْ یُكَذِّبُ بِالدِّیْنِ ۟ؕ
மறுமையில் நற்கூலி, தண்டனை கொடுக்கப்படுவதைப் பொய்யென்று கூறுபவனை நீர் பார்த்திருக்கிறீரா?
Surah 107
Al-Maun
107. ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
7 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَرَءَیْتَ الَّذِیْ یُكَذِّبُ بِالدِّیْنِ ۟ؕ
மறுமையில் நற்கூலி, தண்டனை கொடுக்கப்படுவதைப் பொய்யென்று கூறுபவனை நீர் பார்த்திருக்கிறீரா?
فَذٰلِكَ الَّذِیْ یَدُعُّ الْیَتِیْمَ ۟ۙ
அவன்தான் அநாதையை மிரட்டி விரட்டுகின்றான்.
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ
மேலும், வறியவரின் உணவை அளிக்கும்படித் தூண்டுவதில்லை.
فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَ ۟ۙ
மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு!
الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَ ۟ۙ
அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள்
الَّذِیْنَ هُمْ یُرَآءُوْنَ ۟ۙ
அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.
وَیَمْنَعُوْنَ الْمَاعُوْنَ ۟۠
மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்துதவுவதைத் தடுக்கின்றார்கள்.