اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும் போது,
Surah 56
Al-Waqiah
56. ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
96 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும் போது,
لَیْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۟ۘ
அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்கமாட்டார்.
خَافِضَةٌ رَّافِعَةٌ ۟ۙ
அது தலைகீழாகப் புரட்டக்கூடிய ஆபத்தாயிருக்கும்.
اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۟ۙ
அந்நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும்.
وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۟ۙ
மேலும், மலைகள் பொடிப் பொடியாக்கப்பட்டு ;
فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَثًّا ۟ۙ
பரத்தப்பட்ட புழுதியாகிவிடும்!
وَّكُنْتُمْ اَزْوَاجًا ثَلٰثَةً ۟ؕ
அப்போது நீங்கள் மூன்று குழுவினராய்ப் பிரிந்துவிடுவீர்கள்.
فَاَصْحٰبُ الْمَیْمَنَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
வலப்பக்கத்தார்! வலப்பக்கத்தாருடைய (நற்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!
وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
மேலும், இடப்பக்கத்தார்! இடப்பக்கத்தாருடைய (துர்ப்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!
وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَ ۟ۚۙ
மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே!
اُولٰٓىِٕكَ الْمُقَرَّبُوْنَ ۟ۚ
அவர்கள்தாம் நெருக்கமானவர்கள்.
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் இருப்பார்கள்.
ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
முன்னோரில் நிறையப் பேரும்
وَقَلِیْلٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ
பின்னோரில் ஒரு சிலரும் இருப்பார்கள்.
عَلٰی سُرُرٍ مَّوْضُوْنَةٍ ۟ۙ
தங்க இழைகளால் நெய்யப்பட்ட இருக்கைகளில்
مُّتَّكِـِٕیْنَ عَلَیْهَا مُتَقٰبِلِیْنَ ۟
எதிரெதிரே சாய்ந்திருப்பார்கள்.
یَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۟ۙ
அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள்
بِاَكْوَابٍ وَّاَبَارِیْقَ ۙ۬ وَكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ
மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
لَّا یُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا یُنْزِفُوْنَ ۟ۙ
அவற்றை அருந்துவதால் அவர்களுக்குத் தலைச்சுற்றல் ஏற்படாது; அவர்களின் அறிவு பேதலிக்கவும் செய்யாது.
وَفَاكِهَةٍ مِّمَّا یَتَخَیَّرُوْنَ ۟ۙ
அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அச்சிறுவர்கள் அவர்களுக்கு விதவிதமான, சுவையான கனிகளைப் பரிமாறுவார்கள்;
وَلَحْمِ طَیْرٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟ؕ
மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள்.
وَحُوْرٌ عِیْنٌ ۟ۙ
மேலும், அழகிய கண்களை உடைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்;
كَاَمْثَالِ اللُّؤْلُوءِ الْمَكْنُوْنِ ۟ۚ
அவர்கள் மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று அழகாய் இருப்பார்கள்.
جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
இவை அனைத்தும் உலகில் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும்.
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا تَاْثِیْمًا ۟ۙ
அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள்.
اِلَّا قِیْلًا سَلٰمًا سَلٰمًا ۟
எது பேசப்பட்டாலும் சரியாகவே பேசப்படும்.
وَاَصْحٰبُ الْیَمِیْنِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْیَمِیْنِ ۟ؕ
மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது?
فِیْ سِدْرٍ مَّخْضُوْدٍ ۟ۙ
அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரங்கள்,
وَّطَلْحٍ مَّنْضُوْدٍ ۟ۙ
மேலும் அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்;
وَّظِلٍّ مَّمْدُوْدٍ ۟ۙ
பரந்து விரிந்திருக்கும் நிழல்,
وَّمَآءٍ مَّسْكُوْبٍ ۟ۙ
எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீர்,
وَّفَاكِهَةٍ كَثِیْرَةٍ ۟ۙ
என்றைக்கும் தீர்ந்துவிடாத
لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍ ۟ۙ
தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ;
وَّفُرُشٍ مَّرْفُوْعَةٍ ۟ؕ
மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள்.
اِنَّاۤ اَنْشَاْنٰهُنَّ اِنْشَآءً ۟ۙ
அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம்.
فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًا ۟ۙ
மேலும், அவர்களைக் கன்னிகளாகவும்,
عُرُبًا اَتْرَابًا ۟ۙ
தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.
لِّاَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ۠
இவை அனைத்தும் வலப்பக்கத்தாருக்கு உரியவை.
ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
அத்தகையவர்கள், முன்னோர்களில் நிறையப் பேரும்,
وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ
பின்னோர்களில் நிறையப் பேருமாய் இருப்பார்கள்.
وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِ ۟ؕ
மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?
فِیْ سَمُوْمٍ وَّحَمِیْمٍ ۟ۙ
அனற்காற்றிலும், கொதிக்கும் நீரிலும்,
وَّظِلٍّ مِّنْ یَّحْمُوْمٍ ۟ۙ
கரும்புகைகளின் நிழலிலும் கிடப்பார்கள்.
لَّا بَارِدٍ وَّلَا كَرِیْمٍ ۟
அது குளிர்ச்சியாகவும் இராது; சுகமாகவும் இராது.
اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُتْرَفِیْنَ ۟ۚۖ
இவர்கள் எப்படிப்பட்ட மக்களெனில் இந்த கதியை அடைவதற்கு முன்பு சுகபோகத்தில் மூழ்கியிருந்தார்கள்;
وَكَانُوْا یُصِرُّوْنَ عَلَی الْحِنْثِ الْعَظِیْمِ ۟ۚ
மேலும், பெரும் பாவங்கள் புரிவதில் பிடிவாதமாக இருந்தார்கள்.
وَكَانُوْا یَقُوْلُوْنَ ۙ۬ اَىِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ
“நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும், எலும்புக்கூடாகிப்போனாலும் மீண்டும் எழுப்பப்படுவோமா, என்ன?
اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟
முன்பு வாழ்ந்துசென்ற எங்களுடைய மூதாதையர்களும் எழுப்பப்படுவார்களா, என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
قُلْ اِنَّ الْاَوَّلِیْنَ وَالْاٰخِرِیْنَ ۟ۙ
(நபியே!) இவர்களிடம் கூறும்: “முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரும்
لَمَجْمُوْعُوْنَ ۙ۬ اِلٰی مِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟
திண்ணமாக ஒன்றுகூட்டப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள், நேரம் குறிக்கப்பட்ட ஒரு நாளில்!
ثُمَّ اِنَّكُمْ اَیُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَ ۟ۙ
பின்னர், வழி கெட்டவர்களே! பொய் என்று தூற்றியவர்களே!
لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍ ۟ۙ
நீங்கள் ஸக்கூம் மரத்தினுடையதையே உண்ணப் போகின்றீர்கள்!
فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ۚ
நீங்கள் அதைக்கொண்டே வயிற்றை நிரப்புவீர்கள்.
فَشٰرِبُوْنَ عَلَیْهِ مِنَ الْحَمِیْمِ ۟ۚ
அதற்கு மேல் கொதிக்கும் நீரைக் குடிப்பீர்கள்,
فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِیْمِ ۟ؕ
அடங்கா தாகம் கொண்ட ஒட்டகத்தைப் போன்று!
هٰذَا نُزُلُهُمْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ
இதுதான் (இந்த இடப்பக்கத்தார்க்குரிய) விருந்து உபசாரப் பொருட்களாகும், கூலி கொடுக்கும் நாளில்!
نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ ۟
நாமே உங்களைப் படைத்தோம். பிறகு ஏன் நீங்கள் உண்மை என ஏற்றுக்கொள்வதில்லை?
اَفَرَءَیْتُمْ مَّا تُمْنُوْنَ ۟ؕ
நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ ۟
இதனைக் கொண்டு குழந்தையை நீங்கள் உருவாக்குகின்றீர்களா; அல்லது அதனை உருவாக்குவது நாமா?
نَحْنُ قَدَّرْنَا بَیْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟ۙ
நாமே மரணத்தை உங்களிடையே விதித்திருக்கின்றோம்.
عَلٰۤی اَنْ نُّبَدِّلَ اَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِیْ مَا لَا تَعْلَمُوْنَ ۟
மேலும், உங்களின் வடிவங்களை மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம் இயலாதவரல்லர்.
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰی فَلَوْلَا تَذَكَّرُوْنَ ۟
உங்களின் முதல் பிறப்பைப் பற்றி நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். பிறகு, ஏன் நீங்கள் படிப்பினை பெறுவதில்லை?
اَفَرَءَیْتُمْ مَّا تَحْرُثُوْنَ ۟ؕ
நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ ۟
இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா?
لَوْ نَشَآءُ لَجَعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ ۟
நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள்;
اِنَّا لَمُغْرَمُوْنَ ۟ۙ
அனைத்தும் தண்டமாகிவிட்டதே;
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
நாம் பெரும் துர்ப்பாக்கியவான்களாய் ஆகிவிட்டோமே என்று!
اَفَرَءَیْتُمُ الْمَآءَ الَّذِیْ تَشْرَبُوْنَ ۟ؕ
நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது கண்திறந்து பார்த்திருக்கின்றீர்களா?
ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ ۟
மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்களா? அல்லது அதனைப் பொழியச் செய்தது நாமா?
لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ ۟
நாம் நாடினால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை?
اَفَرَءَیْتُمُ النَّارَ الَّتِیْ تُوْرُوْنَ ۟ؕ
நீங்கள் எரிக்கின்ற இந்தத் தீயைப் பற்றி எப்போதாவது நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?
ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔوْنَ ۟
அதன் மரத்தை நீங்கள் படைத்திருக்கின்றீர்களா? அல்லது அதனைப் படைத்தவர் நாமா?
نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِیْنَ ۟ۚ
நாம் இதனை நினைவூட்டும் சாதனமாகவும் தேவையுடையோருக்கு வாழ்க்கைச் சாதனமாகவும் அமைத்துள்ளோம்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ ۟ۙ
இல்லை, நட்சத்திரங்களின் அமைநிலைகள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِیْمٌ ۟ۙ
நீங்கள் உணர்வீர்களேயானால், திண்ணமாக இது ஒரு மகத்தான சத்தியம்தான்!
اِنَّهٗ لَقُرْاٰنٌ كَرِیْمٌ ۟ۙ
இது ஓர் உன்னதமான குர்ஆன்.
فِیْ كِتٰبٍ مَّكْنُوْنٍ ۟ۙ
இது பாதுகாப்பானதொரு நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ ۟ؕ
தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இதனைத் தொடமுடியாது.
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
இது அகிலத்தின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும்.
اَفَبِهٰذَا الْحَدِیْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ ۟ۙ
பிறகு என்ன, இந்த வசனத்தையா நீங்கள் அலட்சியப்படுத்துகின்றீர்கள்?
وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ ۟
மேலும், இதனைப் பொய்யென்று தூற்றுவதுதான் இந்த அருட்கொடையில் உங்களுக்குரிய பங்கா?
فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَ ۟ۙ
இறந்துபோகின்ற ஒருவரின் உயிர் தொண்டைவரை வந்து அவர் இறந்து கொண்டிருக்கும்போது;
وَاَنْتُمْ حِیْنَىِٕذٍ تَنْظُرُوْنَ ۟ۙ
உங்கள் கண்களாலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْكُمْ وَلٰكِنْ لَّا تُبْصِرُوْنَ ۟
அப்போது உங்களைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அண்மையில் இருக்கின்றோம். ஆனால், அது உங்களுக்குத் தென்படுவதில்லை.
فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَیْرَ مَدِیْنِیْنَ ۟ۙ
நீங்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய் இருந்தால்
تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
உங்களுடைய இந்தக் கருத்தில் நீங்கள் வாய்மையானவர்களாய் இருந்தால் அந்நேரத்தில் வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பக் கொண்டு வருவதில்லை?
فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
பின்னர், இறக்கின்ற அந்த மனிதர் நெருக்கமானவர்களுள் ஒருவராய் இருந்தால்
فَرَوْحٌ وَّرَیْحَانٌ ۙ۬ وَّجَنَّتُ نَعِیْمٍ ۟
அவருக்கு சுகமும், உயர்தரமான உணவும், அருட்கொடைகள் நிறைந்த சுவனமும் இருக்கின்றன.
وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ۙ
மேலும், அவர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருந்தால்,
فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ
“சாந்தி உண்டாகட்டும், உம்மீது! நீர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருக்கின்றீர்!” என்று கூறி வரவேற்கப்படுவார்.
وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِیْنَ الضَّآلِّیْنَ ۟ۙ
மேலும், அவர் பொய் எனத் தூற்றியவர்களில் ஒருவராகவும், வழிகேடர்களில் ஒருவராகவும் இருந்தால்,
فَنُزُلٌ مِّنْ حَمِیْمٍ ۟ۙ
கொதிக்கும் நீரும்,
وَّتَصْلِیَةُ جَحِیْمٍ ۟
நரகத்தில் வீசப்படுவதும்தாம் அவருக்குரிய ‘உபசாரம்’ ஆகும்!
اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْیَقِیْنِ ۟ۚ
திண்ணமாக, இவை அனைத்தும் திட்டவட்டமான உண்மைகளாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!