All Surahs

Surah 56

الواقعة

Al-Waqiah

56. ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)

96 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ

நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும் போது,

2

لَیْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۟ۘ

அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்கமாட்டார்.

3

خَافِضَةٌ رَّافِعَةٌ ۟ۙ

அது தலைகீழாகப் புரட்டக்கூடிய ஆபத்தாயிருக்கும்.

4

اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۟ۙ

அந்நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும்.

5

وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۟ۙ

மேலும், மலைகள் பொடிப் பொடியாக்கப்பட்டு ;

6

فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَثًّا ۟ۙ

பரத்தப்பட்ட புழுதியாகிவிடும்!

7

وَّكُنْتُمْ اَزْوَاجًا ثَلٰثَةً ۟ؕ

அப்போது நீங்கள் மூன்று குழுவினராய்ப் பிரிந்துவிடுவீர்கள்.

8

فَاَصْحٰبُ الْمَیْمَنَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ

வலப்பக்கத்தார்! வலப்பக்கத்தாருடைய (நற்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!

9

وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ

மேலும், இடப்பக்கத்தார்! இடப்பக்கத்தாருடைய (துர்ப்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!

10

وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَ ۟ۚۙ

மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே!

11

اُولٰٓىِٕكَ الْمُقَرَّبُوْنَ ۟ۚ

அவர்கள்தாம் நெருக்கமானவர்கள்.

12

فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் இருப்பார்கள்.

13

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ

முன்னோரில் நிறையப் பேரும்

14

وَقَلِیْلٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ

பின்னோரில் ஒரு சிலரும் இருப்பார்கள்.

15

عَلٰی سُرُرٍ مَّوْضُوْنَةٍ ۟ۙ

தங்க இழைகளால் நெய்யப்பட்ட இருக்கைகளில்

16

مُّتَّكِـِٕیْنَ عَلَیْهَا مُتَقٰبِلِیْنَ ۟

எதிரெதிரே சாய்ந்திருப்பார்கள்.

17

یَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۟ۙ

அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள்

18

بِاَكْوَابٍ وَّاَبَارِیْقَ ۙ۬ وَكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ

மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.

19

لَّا یُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا یُنْزِفُوْنَ ۟ۙ

அவற்றை அருந்துவதால் அவர்களுக்குத் தலைச்சுற்றல் ஏற்படாது; அவர்களின் அறிவு பேதலிக்கவும் செய்யாது.

20

وَفَاكِهَةٍ مِّمَّا یَتَخَیَّرُوْنَ ۟ۙ

அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அச்சிறுவர்கள் அவர்களுக்கு விதவிதமான, சுவையான கனிகளைப் பரிமாறுவார்கள்;

21

وَلَحْمِ طَیْرٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟ؕ

மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள்.

22

وَحُوْرٌ عِیْنٌ ۟ۙ

மேலும், அழகிய கண்களை உடைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்;

23

كَاَمْثَالِ اللُّؤْلُوءِ الْمَكْنُوْنِ ۟ۚ

அவர்கள் மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று அழகாய் இருப்பார்கள்.

24

جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

இவை அனைத்தும் உலகில் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும்.

25

لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا تَاْثِیْمًا ۟ۙ

அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள்.

26

اِلَّا قِیْلًا سَلٰمًا سَلٰمًا ۟

எது பேசப்பட்டாலும் சரியாகவே பேசப்படும்.

27

وَاَصْحٰبُ الْیَمِیْنِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْیَمِیْنِ ۟ؕ

மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது?

28

فِیْ سِدْرٍ مَّخْضُوْدٍ ۟ۙ

அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரங்கள்,

29

وَّطَلْحٍ مَّنْضُوْدٍ ۟ۙ

மேலும் அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்;

30

وَّظِلٍّ مَّمْدُوْدٍ ۟ۙ

பரந்து விரிந்திருக்கும் நிழல்,

31

وَّمَآءٍ مَّسْكُوْبٍ ۟ۙ

எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீர்,

32

وَّفَاكِهَةٍ كَثِیْرَةٍ ۟ۙ

என்றைக்கும் தீர்ந்துவிடாத

33

لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍ ۟ۙ

தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ;

34

وَّفُرُشٍ مَّرْفُوْعَةٍ ۟ؕ

மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள்.

35

اِنَّاۤ اَنْشَاْنٰهُنَّ اِنْشَآءً ۟ۙ

அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம்.

36

فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًا ۟ۙ

மேலும், அவர்களைக் கன்னிகளாகவும்,

37

عُرُبًا اَتْرَابًا ۟ۙ

தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.

38

لِّاَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ۠

இவை அனைத்தும் வலப்பக்கத்தாருக்கு உரியவை.

39

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ

அத்தகையவர்கள், முன்னோர்களில் நிறையப் பேரும்,

40

وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ

பின்னோர்களில் நிறையப் பேருமாய் இருப்பார்கள்.

41

وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِ ۟ؕ

மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?

42

فِیْ سَمُوْمٍ وَّحَمِیْمٍ ۟ۙ

அனற்காற்றிலும், கொதிக்கும் நீரிலும்,

43

وَّظِلٍّ مِّنْ یَّحْمُوْمٍ ۟ۙ

கரும்புகைகளின் நிழலிலும் கிடப்பார்கள்.

44

لَّا بَارِدٍ وَّلَا كَرِیْمٍ ۟

அது குளிர்ச்சியாகவும் இராது; சுகமாகவும் இராது.

45

اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُتْرَفِیْنَ ۟ۚۖ

இவர்கள் எப்படிப்பட்ட மக்களெனில் இந்த கதியை அடைவதற்கு முன்பு சுகபோகத்தில் மூழ்கியிருந்தார்கள்;

46

وَكَانُوْا یُصِرُّوْنَ عَلَی الْحِنْثِ الْعَظِیْمِ ۟ۚ

மேலும், பெரும் பாவங்கள் புரிவதில் பிடிவாதமாக இருந்தார்கள்.

47

وَكَانُوْا یَقُوْلُوْنَ ۙ۬ اَىِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ

“நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும், எலும்புக்கூடாகிப்போனாலும் மீண்டும் எழுப்பப்படுவோமா, என்ன?

48

اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟

முன்பு வாழ்ந்துசென்ற எங்களுடைய மூதாதையர்களும் எழுப்பப்படுவார்களா, என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

49

قُلْ اِنَّ الْاَوَّلِیْنَ وَالْاٰخِرِیْنَ ۟ۙ

(நபியே!) இவர்களிடம் கூறும்: “முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரும்

50

لَمَجْمُوْعُوْنَ ۙ۬ اِلٰی مِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟

திண்ணமாக ஒன்றுகூட்டப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள், நேரம் குறிக்கப்பட்ட ஒரு நாளில்!

51

ثُمَّ اِنَّكُمْ اَیُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَ ۟ۙ

பின்னர், வழி கெட்டவர்களே! பொய் என்று தூற்றியவர்களே!

52

لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍ ۟ۙ

நீங்கள் ஸக்கூம் மரத்தினுடையதையே உண்ணப் போகின்றீர்கள்!

53

فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ۚ

நீங்கள் அதைக்கொண்டே வயிற்றை நிரப்புவீர்கள்.

54

فَشٰرِبُوْنَ عَلَیْهِ مِنَ الْحَمِیْمِ ۟ۚ

அதற்கு மேல் கொதிக்கும் நீரைக் குடிப்பீர்கள்,

55

فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِیْمِ ۟ؕ

அடங்கா தாகம் கொண்ட ஒட்டகத்தைப் போன்று!

56

هٰذَا نُزُلُهُمْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ

இதுதான் (இந்த இடப்பக்கத்தார்க்குரிய) விருந்து உபசாரப் பொருட்களாகும், கூலி கொடுக்கும் நாளில்!

57

نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ ۟

நாமே உங்களைப் படைத்தோம். பிறகு ஏன் நீங்கள் உண்மை என ஏற்றுக்கொள்வதில்லை?

58

اَفَرَءَیْتُمْ مَّا تُمْنُوْنَ ۟ؕ

நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?

59

ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ ۟

இதனைக் கொண்டு குழந்தையை நீங்கள் உருவாக்குகின்றீர்களா; அல்லது அதனை உருவாக்குவது நாமா?

60

نَحْنُ قَدَّرْنَا بَیْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟ۙ

நாமே மரணத்தை உங்களிடையே விதித்திருக்கின்றோம்.

61

عَلٰۤی اَنْ نُّبَدِّلَ اَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِیْ مَا لَا تَعْلَمُوْنَ ۟

மேலும், உங்களின் வடிவங்களை மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம் இயலாதவரல்லர்.

62

وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰی فَلَوْلَا تَذَكَّرُوْنَ ۟

உங்களின் முதல் பிறப்பைப் பற்றி நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். பிறகு, ஏன் நீங்கள் படிப்பினை பெறுவதில்லை?

63

اَفَرَءَیْتُمْ مَّا تَحْرُثُوْنَ ۟ؕ

நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?

64

ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ ۟

இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா?

65

لَوْ نَشَآءُ لَجَعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ ۟

நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள்;

66

اِنَّا لَمُغْرَمُوْنَ ۟ۙ

அனைத்தும் தண்டமாகிவிட்டதே;

67

بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟

நாம் பெரும் துர்ப்பாக்கியவான்களாய் ஆகிவிட்டோமே என்று!

68

اَفَرَءَیْتُمُ الْمَآءَ الَّذِیْ تَشْرَبُوْنَ ۟ؕ

நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது கண்திறந்து பார்த்திருக்கின்றீர்களா?

69

ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ ۟

மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்களா? அல்லது அதனைப் பொழியச் செய்தது நாமா?

70

لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ ۟

நாம் நாடினால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை?

71

اَفَرَءَیْتُمُ النَّارَ الَّتِیْ تُوْرُوْنَ ۟ؕ

நீங்கள் எரிக்கின்ற இந்தத் தீயைப் பற்றி எப்போதாவது நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?

72

ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔوْنَ ۟

அதன் மரத்தை நீங்கள் படைத்திருக்கின்றீர்களா? அல்லது அதனைப் படைத்தவர் நாமா?

73

نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِیْنَ ۟ۚ

நாம் இதனை நினைவூட்டும் சாதனமாகவும் தேவையுடையோருக்கு வாழ்க்கைச் சாதனமாகவும் அமைத்துள்ளோம்.

74

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠

எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

75

فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ ۟ۙ

இல்லை, நட்சத்திரங்களின் அமைநிலைகள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

76

وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِیْمٌ ۟ۙ

நீங்கள் உணர்வீர்களேயானால், திண்ணமாக இது ஒரு மகத்தான சத்தியம்தான்!

77

اِنَّهٗ لَقُرْاٰنٌ كَرِیْمٌ ۟ۙ

இது ஓர் உன்னதமான குர்ஆன்.

78

فِیْ كِتٰبٍ مَّكْنُوْنٍ ۟ۙ

இது பாதுகாப்பானதொரு நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

79

لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ ۟ؕ

தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இதனைத் தொடமுடியாது.

80

تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟

இது அகிலத்தின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும்.

81

اَفَبِهٰذَا الْحَدِیْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ ۟ۙ

பிறகு என்ன, இந்த வசனத்தையா நீங்கள் அலட்சியப்படுத்துகின்றீர்கள்?

82

وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ ۟

மேலும், இதனைப் பொய்யென்று தூற்றுவதுதான் இந்த அருட்கொடையில் உங்களுக்குரிய பங்கா?

83

فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَ ۟ۙ

இறந்துபோகின்ற ஒருவரின் உயிர் தொண்டைவரை வந்து அவர் இறந்து கொண்டிருக்கும்போது;

84

وَاَنْتُمْ حِیْنَىِٕذٍ تَنْظُرُوْنَ ۟ۙ

உங்கள் கண்களாலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

85

وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْكُمْ وَلٰكِنْ لَّا تُبْصِرُوْنَ ۟

அப்போது உங்களைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அண்மையில் இருக்கின்றோம். ஆனால், அது உங்களுக்குத் தென்படுவதில்லை.

86

فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَیْرَ مَدِیْنِیْنَ ۟ۙ

நீங்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய் இருந்தால்

87

تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

உங்களுடைய இந்தக் கருத்தில் நீங்கள் வாய்மையானவர்களாய் இருந்தால் அந்நேரத்தில் வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பக் கொண்டு வருவதில்லை?

88

فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ

பின்னர், இறக்கின்ற அந்த மனிதர் நெருக்கமானவர்களுள் ஒருவராய் இருந்தால்

89

فَرَوْحٌ وَّرَیْحَانٌ ۙ۬ وَّجَنَّتُ نَعِیْمٍ ۟

அவருக்கு சுகமும், உயர்தரமான உணவும், அருட்கொடைகள் நிறைந்த சுவனமும் இருக்கின்றன.

90

وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ۙ

மேலும், அவர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருந்தால்,

91

فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ

“சாந்தி உண்டாகட்டும், உம்மீது! நீர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருக்கின்றீர்!” என்று கூறி வரவேற்கப்படுவார்.

92

وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِیْنَ الضَّآلِّیْنَ ۟ۙ

மேலும், அவர் பொய் எனத் தூற்றியவர்களில் ஒருவராகவும், வழிகேடர்களில் ஒருவராகவும் இருந்தால்,

93

فَنُزُلٌ مِّنْ حَمِیْمٍ ۟ۙ

கொதிக்கும் நீரும்,

94

وَّتَصْلِیَةُ جَحِیْمٍ ۟

நரகத்தில் வீசப்படுவதும்தாம் அவருக்குரிய ‘உபசாரம்’ ஆகும்!

95

اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْیَقِیْنِ ۟ۚ

திண்ணமாக, இவை அனைத்தும் திட்டவட்டமான உண்மைகளாகும்.

96

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠

எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

PreviousAr-RahmanNextAl-Hadid

0:00–:––