All Surahs

Surah 101

القارعة

Al-Qariah

101. ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)

11 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اَلْقَارِعَةُ ۟ۙ

பயங்கரமான நிகழ்ச்சி!

2

مَا الْقَارِعَةُ ۟ۚ

அந்த பயங்கரமான நிகழ்ச்சி என்ன?

3

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ۟ؕ

அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?

4

یَوْمَ یَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِ ۟ۙ

அந்நாளில் மக்கள், சிதறிக் கிடக்கும் ஈசல்கள் போலவும்

5

وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِ ۟ؕ

மேலும், மலைகள் கடையப்பட்ட வண்ண வண்ணக் கம்பளியைப் போலவும் ஆகிவிடும்!

6

فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ ۟ۙ

பிறகு, எவருடைய எடைத்தட்டுகள் கனத்திருக்குமோ

7

فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ؕ

அவர் மனத்திற்குகந்த வாழ்வைப் பெறுவார்.

8

وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ ۟ۙ

மேலும், எவருடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ

9

فَاُمُّهٗ هَاوِیَةٌ ۟ؕ

அவருடைய தங்குமிடம் ஆழமான படுகுழிதான்!

10

وَمَاۤ اَدْرٰىكَ مَا هِیَهْ ۟ؕ

அது என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?

11

نَارٌ حَامِیَةٌ ۟۠

கொழுந்து விட்டெரியும் நெருப்பு!

PreviousAl-AdiyatNextAt-Takathur

0:00–:––