All Surahs

Surah 99

الزلزلة

Az-Zalzalah

99. ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)

8 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۟ۙ

பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது

2

وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۟ۙ

மேலும் பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து விடும்போது,

3

وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۟ۚ

மேலும், “அதற்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று மனிதன் கேட்கும்போது

4

یَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۟ؕ

அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும்.

5

بِاَنَّ رَبَّكَ اَوْحٰی لَهَا ۟ؕ

ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு எடுத்துரைக்கும்படி) ஆணையிட்டிருப்பான்.

6

یَوْمَىِٕذٍ یَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ۬ لِّیُرَوْا اَعْمَالَهُمْ ۟ؕ

அன்று மக்கள் பல்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள், தங்களுடைய செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக!

7

فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗ ۟ؕ

பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான்.

8

وَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ ۟۠

மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுகொள்வான்.

PreviousAl-BayyinahNextAl-Adiyat

0:00–:––