وَالَّیْلِ اِذَا یَغْشٰی ۟ۙ
இரவின் மீது சத்தியமாக, அது மூடி மறைத்துக் கொள்ளும்போது!
Surah 92
Al-Layl
92. ஸூரத்துல் லைல் (இரவு)
21 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالَّیْلِ اِذَا یَغْشٰی ۟ۙ
இரவின் மீது சத்தியமாக, அது மூடி மறைத்துக் கொள்ளும்போது!
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰی ۟ۙ
பகலின் மீது சத்தியமாக, அது ஒளிரும் போது!
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
மேலும், ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
اِنَّ سَعْیَكُمْ لَشَتّٰی ۟ؕ
உண்மையில் உங்களுடைய முயற்சிகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன.
فَاَمَّا مَنْ اَعْطٰی وَاتَّقٰی ۟ۙ
எனவே, எவர் (இறைவழியில்) பொருளை வழங்கினாரோ மேலும் (இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து) விலகியிருந்தாரோ
وَصَدَّقَ بِالْحُسْنٰی ۟ۙ
மேலும், நன்மையை உண்மையென ஏற்றுக்கொண்டாரோ,
فَسَنُیَسِّرُهٗ لِلْیُسْرٰی ۟ؕ
அவருக்கு இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.
وَاَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنٰی ۟ۙ
எவர் கஞ்சத்தனம் செய்கின்றாரோ மேலும் (தன் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்தாரோ;
وَكَذَّبَ بِالْحُسْنٰی ۟ۙ
இன்னும் நன்மையைப் பொய்யென நிராகரித்தாரோ
فَسَنُیَسِّرُهٗ لِلْعُسْرٰی ۟ؕ
அவருக்கு கடினமான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.
وَمَا یُغْنِیْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰی ۟ؕ
அவனுடைய செல்வம் அவன் அழிந்து விடும்போது அவனுக்கு என்ன பயன் அளிக்கப்போகின்றது?
اِنَّ عَلَیْنَا لَلْهُدٰی ۟ؗۖ
திண்ணமாக, வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும்.
وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُوْلٰی ۟
மேலும், உண்மையில் மறுமை மற்றும் இம்மை இரண்டும் நமக்கே உரியனவாகும்.
فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰی ۟ۚ
எனவே, கொழுந்துவிட்டெரியும் நெருப்பைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கை செய்துவிட்டேன்.
لَا یَصْلٰىهَاۤ اِلَّا الْاَشْقَی ۟ۙ
ஆனால், அதில் யாரும் எரிந்துபோக மாட்டார்கள், பெரும் துர்ப்பாக்கியவானைத் தவிர!
الَّذِیْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
அவர்கள் பொய்யென மறுத்தார்கள், புறக்கணித்தார்கள்.
وَسَیُجَنَّبُهَا الْاَتْقَی ۟ۙ
மேலும், அதனைவிட்டுத் தொலைவில் வைக்கப்படுவார், மிகுந்த இறையச்சம் உடையவர்.
الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰی ۟ۚ
அவரோ தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்
وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰۤی ۟ۙ
கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை.
اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰی ۟ۚ
ஆனாலும், அவர் உயர்வுமிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார்.
وَلَسَوْفَ یَرْضٰی ۟۠
மேலும், (அவரைக் குறித்து) அவசியம் அவன் திருப்தியடைவான்.