All Surahs

Surah 90

البلد

Al-Balad

90. ஸூரத்துல் பலத் (நகரம்)

20 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ

இல்லை! இந்த (மக்கா) நகரின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்!

2

وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ

மேலும், நிலைமை என்னவெனில், (நபியே!) இந்நகரத்தில் நீர் ஆகுமாக்கப்பட்டுள்ளீர்!

3

وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ

மேலும் தந்தை (ஆதம்) மீதும் அவரிலிருந்து பிறந்த மக்கள் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

4

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ

திண்ணமாக, நாம் மனிதனைப் பெரும் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம்.

5

اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ

‘அவன் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது’ என்று அவன் நினைத்திருக்கின்றானா?

6

یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ

“ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன்” என்று அவன் கூறுகின்றான்.

7

اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ

யாருமே அவனைப் பார்க்கவில்லை என்று அவன் கருதுகின்றானா?

8

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ

அவனுக்கு நாம் இரு கண்களையும்

9

وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ

ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா?

10

وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ

மேலும், (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம். (இல்லையா?)

11

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ

ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை.

12

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ

கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?

13

فَكُّ رَقَبَةٍ ۟ۙ

(அதுதான்) ஒருவனை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பது ஆகும்;

14

اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ

அல்லது பட்டினி நாளில் உணவளிப்பதும் ஆகும்.

15

یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍ ۟ۙ

உறவினரான அநாதைக்கோ

16

اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ

அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ (உணவளிப்பதும் ஆகும்!)

17

ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ

பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும்.

18

اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ

இத்தகையோர்தாம் வலப்பக்கத்தார்.

19

وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ

மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இடப் பக்கத்தார்.

20

عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ۟۠

அவர்கள் மீது நெருப்பு படர்ந்திருக்கும்.

PreviousAl-FajrNextAsh-Shams

0:00–:––