All Surahs

Surah 88

الغاشية

Al-Ghashiyah

88. ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)

26 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْغَاشِیَةِ ۟ؕ

சூழ்ந்து கொள்ளக் கூடிய துன்பம் (அதாவது மறுமை) பற்றிய செய்தி உமக்கு வந்ததா?

2

وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ خَاشِعَةٌ ۟ۙ

அந்நாளில் சில முகங்கள் பீதியுற்றிருக்கும்;

3

عَامِلَةٌ نَّاصِبَةٌ ۟ۙ

கடுமையான சிரமத்தை மேற் கொண்டிருக்கும்; களைத்துப் போயிருக்கும்;

4

تَصْلٰی نَارًا حَامِیَةً ۟ۙ

கனன்றெழும் நெருப்பில் கருகிக் கொண்டிருக்கும்;

5

تُسْقٰی مِنْ عَیْنٍ اٰنِیَةٍ ۟ؕ

கொதிக்கும் ஊற்றுநீர் அவர்களுக்கு அருந்தக் கொடுக்கப்படும்;

6

لَیْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِیْعٍ ۟ۙ

முட்கள் நிறைந்த காய்ந்துபோன புற்பூண்டைத் தவிர வேறெந்த உணவும் அவர்களுக்குக் கிடைக்காது.

7

لَّا یُسْمِنُ وَلَا یُغْنِیْ مِنْ جُوْعٍ ۟ؕ

அது ஊட்டமும் தராது; பசியையும் போக்காது!

8

وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاعِمَةٌ ۟ۙ

வேறு சில முகங்கள் அந்நாளில் பொலிவுற்றிருக்கும்;

9

لِّسَعْیِهَا رَاضِیَةٌ ۟ۙ

தன் செயல்கள் குறித்து திருப்தியடைந்திருக்கும்;

10

فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ

உன்னதமான சுவனத்தில் இருக்கும்;

11

لَّا تَسْمَعُ فِیْهَا لَاغِیَةً ۟ؕ

அவை அங்கு வீணானவற்றைச் செவியுற மாட்டா.

12

فِیْهَا عَیْنٌ جَارِیَةٌ ۟ۘ

ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று அங்கு உண்டு;

13

فِیْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۟ۙ

உயர்ந்த கட்டில்கள் அங்கு இருக்கும்;

14

وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۟ۙ

மேலும், கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும்.

15

وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۟ۙ

தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்;

16

وَّزَرَابِیُّ مَبْثُوْثَةٌ ۟ؕ

எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும்.

17

اَفَلَا یَنْظُرُوْنَ اِلَی الْاِبِلِ كَیْفَ خُلِقَتْ ۟ۥ

(இம்மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை எனில்,) ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று!

18

وَاِلَی السَّمَآءِ كَیْفَ رُفِعَتْ ۟ۥ

மேலும், வானத்தைப் பார்க்க வில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று!

19

وَاِلَی الْجِبَالِ كَیْفَ نُصِبَتْ ۟ۥ

மேலும், மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று!

20

وَاِلَی الْاَرْضِ كَیْفَ سُطِحَتْ ۟ۥ

மேலும், பூமியைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று!

21

فَذَكِّرْ ؕ۫ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ۟ؕ

சரி (நபியே!) நீர் அறிவுரை புரிந்தவண்ணம் இருப்பீராக! திண்ணமாக, நீர் அறிவுரை புரிபவர் மட்டுமே ஆவீர்!

22

لَسْتَ عَلَیْهِمْ بِمُصَۜیْطِرٍ ۟ۙ

அவர்களை நீர் நிர்ப்பந்திப்பவர் அல்லர்.

23

اِلَّا مَنْ تَوَلّٰی وَكَفَرَ ۟ۙ

ஆனால், எவன் புறக்கணித்தானோ மேலும், நிராகரித்தானோ

24

فَیُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَ ۟ؕ

அவனுக்கு அல்லாஹ் கடினமான தண்டனை அளிப்பான்.

25

اِنَّ اِلَیْنَاۤ اِیَابَهُمْ ۟ۙ

திண்ணமாக, இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது.

26

ثُمَّ اِنَّ عَلَیْنَا حِسَابَهُمْ ۟۠

பிறகு, இவர்களிடம் கணக்கு வாங்கும் பொறுப்பு நம்மீதே உள்ளது.

PreviousAl-AlaNextAl-Fajr

0:00–:––