وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ
தொடர்ந்து அனுப்பப்படுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக;
Surah 77
Al-Mursalat
77. ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)
50 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ
தொடர்ந்து அனுப்பப்படுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக;
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ
பிறகு, புயல் வேகத்தில் வீசுகின்றவற்றின் மீது சத்தியமாக;
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ
(மேகங்களை) பரப்புகின்றவற்றின் மீது சத்தியமாக;
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ
பிறகு, அவற்றைத் துண்டு துண்டாகப் பிளக்கின்றவற்றின் மீது சத்தியமாக;
فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ
பிறகு, (இதயங்களில் இறைவனின்) நினைவை உண்டாக்குபவைமீது சத்தியமாக;
عُذْرًا اَوْ نُذْرًا ۟ۙ
மன்னிப்புப் பெறுவதற்காக அல்லது அச்சமூட்டி எச்சரிப்பதற்காக!
اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ۟ؕ
எதைப் பற்றி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்றதோ, அது திண்ணமாக நிகழக்கூடியதே!
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۟ۙ
பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும்பொழுது,
وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۟ۙ
வானம் பிளக்கப்படும்பொழுது,
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۟ۙ
மலைகள் தூள்தூளாக் கப்படும்பொழுது,
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ۟ؕ
இறைத்தூதர்கள் ஆஜராகும் நேரம் வரும் பொழுது (அது நிகழ்ந்துவிடும்).
لِاَیِّ یَوْمٍ اُجِّلَتْ ۟ؕ
எந்த நாளுக்காக இந்தக் காரியம் பிற்படுத்தப்பட்டுள்ளது?
لِیَوْمِ الْفَصْلِ ۟ۚ
தீர்ப்பு நாளுக்காகத் தான்!
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الْفَصْلِ ۟ؕ
அந்தத் தீர்ப்புநாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِیْنَ ۟ؕ
நாம் முன் சென்றோரை அழிக்கவில்லையா, என்ன?
ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِیْنَ ۟
பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில்தானே பின்வருவோரையும் நடக்கச் செய்வோம்!
كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
குற்றவாளிகளிடம் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோம்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۙ
என்ன, நாம் உங்களை அற்பமானதொரு நீரிலிருந்து படைக்கவில்லையா?
فَجَعَلْنٰهُ فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۟ۙ
மேலும், அதனை பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்கவில்லையா
اِلٰی قَدَرٍ مَّعْلُوْمٍ ۟ۙ
ஒரு குறிப்பிட்ட காலம்வரை.
فَقَدَرْنَا ۖۗ فَنِعْمَ الْقٰدِرُوْنَ ۟
(இதோ பாருங்கள்!) நாம் இதற்கான ஆற்றலுடையவர்கள்தாம். ஆம்! நாம் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்கள்தாம்!
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۟ۙ
நாம் பூமியை ஒன்று திரட்டி வைக்கக்கூடியதாக ஆக்கவில்லையா?
اَحْیَآءً وَّاَمْوَاتًا ۟ۙ
உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும்.
وَّجَعَلْنَا فِیْهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسْقَیْنٰكُمْ مَّآءً فُرَاتًا ۟ؕ
மேலும், மிக உயர்ந்த மலைகளை அதில் நாம் நாட்டவில்லையா? உங்களுக்கு சுவையான நீரைப் புகட்டவும் இல்லையா, என்ன?
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
اِنْطَلِقُوْۤا اِلٰی مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ۚ
இப்போது செல்லுங்கள், நீங்கள் எதனைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம்!
اِنْطَلِقُوْۤا اِلٰی ظِلٍّ ذِیْ ثَلٰثِ شُعَبٍ ۟ۙ
செல்லுங்கள், மூன்று கிளைகளையுடைய நிழலின் பக்கம்!
لَّا ظَلِیْلٍ وَّلَا یُغْنِیْ مِنَ اللَّهَبِ ۟ؕ
அது குளிரச் செய்யக்கூடியதுமன்று, தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றக்கூடியதுமன்று.
اِنَّهَا تَرْمِیْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۟ۚ
அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்.
كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ۟ؕ
அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
هٰذَا یَوْمُ لَا یَنْطِقُوْنَ ۟ۙ
இது எத்தகைய நாள் எனில், இதில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்;
وَلَا یُؤْذَنُ لَهُمْ فَیَعْتَذِرُوْنَ ۟
எந்தச் சாக்குப்போக்கும் கூறிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
هٰذَا یَوْمُ الْفَصْلِ ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِیْنَ ۟
இது தீர்ப்பளிக்கும் நாளாகும். நாம் உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் ஒன்று திரட்டியுள்ளோம்.
فَاِنْ كَانَ لَكُمْ كَیْدٌ فَكِیْدُوْنِ ۟
இப்போது உங்களால் ஏதேனும் சூழ்ச்சி செய்ய முடியுமெனில், எனக்கெதிராக சூழ்ச்சி செய்து பாருங்கள்!
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟۠
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟ۙ
இறையச்சம் கொண்டோர் (இன்று) நிழல்களிலும், ஊற்றுகளிலும் தங்கி வாழ்கிறார்கள்.
وَّفَوَاكِهَ مِمَّا یَشْتَهُوْنَ ۟ؕ
மேலும், அவர்கள் விரும்பும் பழங்கள் (அவர்களுக்காக உள்ளன).
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
நன்கு உண்ணுங்கள்; பருகுங்கள்; நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பரிசாக!
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
நாம் நல்லவர்களுக்கு இத்தகைய கூலியைத்தான் வழங்குகின்றோம்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِیْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ ۟
உண்ணுங்கள்; சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள், சில நாட்களுக்கு! உண்மையில் நீங்கள் குற்றவாளிகள்தாம்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவு தான்!
وَاِذَا قِیْلَ لَهُمُ ارْكَعُوْا لَا یَرْكَعُوْنَ ۟
“(அல்லாஹ்வின் திருமுன்) அடிபணிந்து விடுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அடிபணிவதில்லை.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟۠
இனி, இதற்குப் பின் (இந்தக் குர்ஆனுக்குப்பின்) இவர்கள் எந்த வாக்கின் மீதுதான் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்?