All Surahs

Surah 5

المائدة

Al-Maidah

5. ஸூரத்துல் மாயிதா (ஆகாரம்) (உணவு மரவை)

120 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ۬ اُحِلَّتْ لَكُمْ بَهِیْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا یُتْلٰی عَلَیْكُمْ غَیْرَ مُحِلِّی الصَّیْدِ وَاَنْتُمْ حُرُمٌ ؕ اِنَّ اللّٰهَ یَحْكُمُ مَا یُرِیْدُ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். பின்னால் உங்களுக்குக் கூறப்படுபவை தவிர கால்நடை வகையைச் சேர்ந்த அனைத்து பிராணிகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதென்று கருதிவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவதைக் கட்டளையிடுகின்றான்.

2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآىِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْیَ وَلَا الْقَلَآىِٕدَ وَلَاۤ آٰمِّیْنَ الْبَیْتَ الْحَرَامَ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ؕ وَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ؕ وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ اَنْ تَعْتَدُوْا ۘ وَتَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَالتَّقْوٰی ۪ وَلَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَالْعُدْوَانِ ۪ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவழிபாட்டுக்குரிய சின்னங்களை அவமதிக்காதீர்கள். சங்கைக்குரிய எந்த மாதத்தையும் போர் புரிவதற்கு அனுமதிக்கப்பட்டதாய் கொள்ளாதீர்கள்! இன்னும் குர்பானிக்குரிய பிராணிகளையும், இறைவனுக்காக நேர்ந்துவிடப்பட்டவை என்பதற்கு அறிகுறியாக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணிகளையும் துன்புறுத்தாதீர்கள்! இன்னும் தன்னுடைய இறைவனின் திருவருளையும், திருப்பொருத்தத்தையும் பெற எண்ணி புண்ணியத்தலம் (கஅபா) நோக்கிச் செல்வோரை சிரமத்திற்குள்ளாக்காதீர்கள்! ஆனால், இஹ்ராமின் நிலையிலிருந்து விலகி விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். மேலும் பாருங்கள்: மஸ்ஜிதுல் ஹராமுக்குள் செல்ல முடியாதவாறு உங்கள் வழியினை அடைத்துவிட்ட கூட்டத்தார் மீதுள்ள வெறுப்பு, அவர்களுக்கு எதிராக நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் அளவுக்கு உங்களைக் கொதித்தெழும்படிச் செய்துவிடக்கூடாது. எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்! ஆனால் எது பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். மேலும், இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது.

3

حُرِّمَتْ عَلَیْكُمُ الْمَیْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّیَةُ وَالنَّطِیْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّیْتُمْ ۫ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ؕ ذٰلِكُمْ فِسْقٌ ؕ اَلْیَوْمَ یَىِٕسَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ دِیْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ؕ اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَرَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًا ؕ فَمَنِ اضْطُرَّ فِیْ مَخْمَصَةٍ غَیْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெரிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலிருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப்பட்டவையாகும்.) எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்துவிட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாவமான செயல்களாகும். இன்று உங்களுடைய தீன்வாழ்க்கை நெறி குறித்து நிராகரிப்போர் முற்றிலும் நிராசை அடைந்துவிட்டிருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். மாறாக எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன். (எனவே, உங்கள் மீது விதிக்கப்பட்ட ஹலால், ஹராமெனும் வரம்புகளைப் பேணி நடந்து வாருங்கள்.) ஆயினும் கடும் பசியினால் நிர்பந்திக்கப்பட்டு பாவம் செய்யும் நாட்டமின்றி ஒருவர் அவற்றில் ஏதாவதொன்றைப் புசித்து விட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெருங்கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

4

یَسْـَٔلُوْنَكَ مَاذَاۤ اُحِلَّ لَهُمْ ؕ قُلْ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ۙ وَمَا عَلَّمْتُمْ مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِیْنَ تُعَلِّمُوْنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ ؗ فَكُلُوْا مِمَّاۤ اَمْسَكْنَ عَلَیْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهِ ۪ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟

மக்கள் எவை தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “தூய்மையான அனைத்துப் பொருட்களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.” மேலும் எந்த வேட்டைப் பிராணிகளுக்கு நீங்கள் வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கின்றீர்களோ அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அறிவைக் கொண்டு அவற்றுக்கு வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கிறீர்கள் பிறகு அந்த வேட்டைப் பிராணிகள் உங்களுக்காகப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம். ஆயினும் அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரியுங்கள்! இன்னும் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு மாறு செய்ய அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன்.

5

اَلْیَوْمَ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ حِلٌّ لَّكُمْ ۪ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ؗ وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ وَلَا مُتَّخِذِیْۤ اَخْدَانٍ ؕ وَمَنْ یَّكْفُرْ بِالْاِیْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ ؗ وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟۠

இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும் அனுமதிக்க (ஹலாலாக்க)ப்பட்டிருக்கின்றன. வேதம் அருளப்பட்டவர்களின் உணவு உங்களுக்கும், உங்களது உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், நல்லொழுக்கமுள்ள பெண்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களே; அவர்கள் ஈமான் இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி; உங்களுக்கு முன்னர் வேதம் அருளப்பட்டவர்களின் சமுதாயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஆனால், அவர்களுக்குரிய மஹ்ரைக் கொடுத்து, அவர்களைத் திருமணம் செய்துகொண்டு அவர்களின் பாதுகாவலர்களாய் நீங்கள் திகழவேண்டுமே தவிர, அவர்களுடன் விபச்சாரத்திலோ கள்ளக் காதலிலோ ஈடுபடக்கூடாது. மேலும், எவன் ஈமானின் வழியில் செல்ல மறுக்கின்றானோ அவனது வாழ்வின் அனைத்துச் செயல்களும் வீணாகிவிடும். மேலும், அவன் மறுமையில் பேரிழப்புக்கு ஆளாவான்.

6

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَیْدِیَكُمْ اِلَی الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَی الْكَعْبَیْنِ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ مِّنْهُ ؕ مَا یُرِیْدُ اللّٰهُ لِیَجْعَلَ عَلَیْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَكُمْ وَلِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும்.

7

وَاذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ وَمِیْثَاقَهُ الَّذِیْ وَاثَقَكُمْ بِهٖۤ ۙ اِذْ قُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا ؗ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேற்றினை நினைத்துப் பாருங்கள். மேலும் உங்களிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட உறுதிமொழியை மறந்து விடாதீர்கள். அப்பொழுது நீங்கள் “செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறியிருந்தீர்கள். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ், இதயங்களில் மறைந்திருப்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

8

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ ؗ وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰۤی اَلَّا تَعْدِلُوْا ؕ اِعْدِلُوْا ۫ هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰی ؗ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சிச் செயலாற்றுங்கள். நீங்கள் செய்வனவற்றை முழுமையாக அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான்.

9

وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமென்றும் மகத்தான நற்கூலி அவர்களுக்கு உண்டு என்றும் அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றான்.

10

وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟

மேலும், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!

11

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ یَّبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ فَكَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟۠

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு (அண்மையில்) செய்த பேருதவியை நினைத்துப் பாருங்கள்! ஒரு கூட்டத்தார் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்டிட நாடியிருந்தபோது, அல்லாஹ் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும் தடுத்து நிறுத்தினான். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள்! நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்து நிற்க வேண்டும்.

12

وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۚ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَیْ عَشَرَ نَقِیْبًا ؕ وَقَالَ اللّٰهُ اِنِّیْ مَعَكُمْ ؕ لَىِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَیْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِیْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَلَاُدْخِلَنَّكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟

இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் அல்லாஹ் வலுவான உறுதிமொழி வாங்கியிருந்தான். மேலும் அவர்களில் பன்னிரண்டு பேரைக் கண்காணிப்பாளராய் நியமித்திருந்தான். இன்னும் அல்லாஹ் அவர்களிடம் கூறினான்: “திண்ணமாக, நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நிறுத்தியும் ஜகாத்தை அளித்தும், என்னுடைய தூதர்களை ஏற்று அவர்களுக்கு உதவி புரிந்தும், உங்களுடைய இறைவனுக்கு அழகிய கடன் அளித்தும் வந்தீர்களாயின் திண்ணமாக நான் உங்களுடைய தீமைகளைப் போக்கிவிடுவேன். மேலும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் உங்களை நுழைவிப்பேன். ஆனால் இதன் பின்னரும் உங்களில் எவரேனும் நிராகரிப்புப் போக்கை மேற்கொண்டால் நிச்சயமாக அவர் “ஸவாவுஸ் ஸபீலை” இராஜபாட்டையை விட்டுப் பிறழ்ந்தவராவார்”.

13

فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِیَةً ۚ یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ ۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟

பிறகு அவர்கள் தாம் செய்த வாக்குறுதியை முறித்ததற்காக நாமும் அவர்களை நமது அருளிலிருந்து தூர எறிந்துவிட்டோம். மேலும், அவர்களுடைய நெஞ்சங்களை இறுகச் செய்துவிட்டோம். இப்பொழுது அவர்களுடைய நிலை என்னவெனில் வேத வாக்குகளை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டியும் திரித்தும் விதவிதமாகப் பொருள் கொள்கின்றனர். இன்னும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட உயர் அறிவுரைகளில் பெரும்பாலானவற்றை மறந்தே போயினர். நாள்தோறும் அவர்களுடைய மோசடிச் செயல்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்களில் மிகச் சிலரே இத்தகைய இழி செயலிலிருந்து விலகி இருக்கிறார்கள். (அவர்கள் இவ்வளவு மோசமான நிலைக்கு இறங்கி வந்தபின் அவர்கள் எத்தகைய குறும்புத்தனங்கள் புரிந்தாலும் அவை எதிர்பார்க்கப்பட்டவைதாம்) எனவே, அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்களின் தவறான செயல்களைப் பொருட்படுத்தாதீர்கள். நன்னடத்தையை மேற்கொள்பவர்களையே திண்ணமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.

14

وَمِنَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰۤی اَخَذْنَا مِیْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۪ فَاَغْرَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ وَسَوْفَ یُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟

“நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தவர்களிடமும் இவ்வாறே நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். அவர்களும்கூட தங்களுக்கு நினைவூட்டப்பட்ட நல்லுரைகளில் பெரும்பகுதியை மறந்தே போயினர். இறுதியில் நாம் அவர்களுக்கிடையே மறுமைநாள் வரை பகைமையையும், காழ்ப்புணர்ச்சியையும் விதைத்து விட்டோம். மேலும், அவர்கள் உலகில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை அல்லாஹ் காண்பித்துத் தருகின்ற ஒரு நேரமும் நிச்சயமாக வரத்தான் போகின்றது.

15

یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ كَثِیْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ؕ۬ قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِیْنٌ ۟ۙ

வேதம் அருளப்பட்டவர்களே! நம்முடைய தூதர் உங்களிடம் வருகை தந்துள்ளார். இறைவேதத்தில் நீங்கள் மூடிமறைத்துக் கொண்டிருந்த பல விஷயங்களைத் தெள்ளத் தெளிவாய் அவர் விளக்குகின்றார். இன்னும் பல விஷயங்களை மன்னித்தும் விடுகின்றார். அல்லாஹ்விடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது.

16

یَّهْدِیْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَیُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ بِاِذْنِهٖ وَیَهْدِیْهِمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்.

17

لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ قُلْ فَمَنْ یَّمْلِكُ مِنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ اَنْ یُّهْلِكَ الْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

திண்ணமாக “மர்யத்தின் குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள், நிச்சயமாக நிராகரித்தவர்களாவார்கள். (நபியே!) அவர்களிடம் நீர் கூறும்: “மர்யத்தினுடைய மகன் மஸீஹையும் அவருடைய அன்னையையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்திட நாடினால் அவனைத் தடுத்திட யாருக்குத் துணிவு உண்டு? வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் அனைத்தின் மீதும் உள்ள அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். மேலும், அவனது வலிமை அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது.”

18

وَقَالَتِ الْیَهُوْدُ وَالنَّصٰرٰی نَحْنُ اَبْنٰٓؤُا اللّٰهِ وَاَحِبَّآؤُهٗ ؕ قُلْ فَلِمَ یُعَذِّبُكُمْ بِذُنُوْبِكُمْ ؕ بَلْ اَنْتُمْ بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ؕ یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؗ وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟

“நாங்கள் அல்லாஹ்வின் புதல்வர்கள்; மேலும், அவனது அன்பிற்குரியவர்கள்” என்றெல்லாம் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூறுகின்றார்கள். அவர்களிடம் நீர் கேளும்: “அவ்வாறாயின் உங்களின் பாவச் செயல்களுக்காக அவன் ஏன் உங்களுக்குத் தண்டனை அளிக்கின்றான்?” உண்மையில், அவன் படைத்த மற்ற மனிதர்களைப்போல் நீங்களும் மனிதர்கள்தானே! தான் நாடுபவர்களை அவன் மன்னிக்கின்றான். மேலும் தான் நாடுபவர்களைத் தண்டிக்கின்றான். பூமி, வானங்கள் மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கே உரியன. மேலும், அவனிடமே எல்லாரும் செல்ல வேண்டியிருக்கிறது.

19

یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ عَلٰی فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْ بَشِیْرٍ وَّلَا نَذِیْرٍ ؗ فَقَدْ جَآءَكُمْ بَشِیْرٌ وَّنَذِیْرٌ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠

வேதம் அருளப்பட்டவர்களே! தூதர்களின் வருகைத் தொடர் சிறிது காலம் வரை நின்று போயிருந்த சமயத்தில் எம்முடைய இந்தத் தூதர் உங்களிடம் வந்துள்ளார். மேலும், இறைநெறியின் தெளிவான அறிவுரைகளை உங்களுக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார். எதற்காகவெனில், நற்செய்தி கூறக்கூடிய, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய எவரும் எங்களிடம் வரவில்லையே என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக! (இதோ பாருங்கள்:) இப்போது நற்செய்தி கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். மேலும், அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.

20

وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَعَلَ فِیْكُمْ اَنْۢبِیَآءَ وَجَعَلَكُمْ مُّلُوْكًا ۖۗ وَّاٰتٰىكُمْ مَّا لَمْ یُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟

மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூருங்கள்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான். உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான். மேலும், உலக மக்களில் எவர்க்கும் வழங்கப்படாதவற்றையெல்லாம் உங்களுக்கு வழங்கினான்.

21

یٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِیْ كَتَبَ اللّٰهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟

என் சமூகத்தாரே! உங்களுக்காகவே அல்லாஹ் விதித்துவிட்ட தூய பூமியில் நுழைந்து விடுங்கள்! இன்னும் புறங்காட்டி ஓடாதீர்கள்! நீங்கள் அவ்வாறு செய்தால் பேரிழப்புக்கு ஆளாவீர்கள்.”

22

قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّ فِیْهَا قَوْمًا جَبَّارِیْنَ ۖۗ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰی یَخْرُجُوْا مِنْهَا ۚ فَاِنْ یَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دٰخِلُوْنَ ۟

அதற்கவர்கள், “மூஸாவே...! அப்பூமியில் மிக்க வலிமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள் வெளியேறாத வரை நாங்கள் அங்குச் செல்லவே மாட்டோம். ஆயினும் அவர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நுழையத் தயாராய் உள்ளோம்” என்று பதில் தந்தார்கள்.

23

قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِیْنَ یَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمَا ادْخُلُوْا عَلَیْهِمُ الْبَابَ ۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ۬ وَعَلَی اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

அவ்வாறு (நுழைய) அஞ்சிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் இருந்தனர். அவர்கள் கூறினார்கள்: “வலிமை வாய்ந்தவர்களைப் பொருட்படுத்தாமல் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு உள்ளே நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்!”

24

قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِیْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قٰعِدُوْنَ ۟

ஆனால் அவர்கள் மீண்டும் இவ்வாறே கூறினார்கள்: “மூஸாவே! அவர்கள் அங்கு இருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் அங்குப் போகமாட்டோம். வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்.”

25

قَالَ رَبِّ اِنِّیْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِیْ وَاَخِیْ فَافْرُقْ بَیْنَنَا وَبَیْنَ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟

அதற்கு மூஸா, “என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் தவிர நிச்சயமாக வேறு யாரும் என்னுடைய அதிகாரத்தில் இல்லை; எனவே, கீழ்ப்படியாத இம்மக்களிடமிருந்து எங்களைப் பிரித்துவிடுவாயாக!” எனக் கூறினார்.

26

قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَیْهِمْ اَرْبَعِیْنَ سَنَةً ۚ یَتِیْهُوْنَ فِی الْاَرْضِ ؕ فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟۠

அதற்கு அல்லாஹ் மறுமொழி பகர்ந்தான்: “அப்படியென்றால் நாற்பதாண்டு காலம் வரைஅந்நாடு அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டதாகும். அவர்கள் பூமியில் அலைக்கழிந்து திரிவார்கள். கீழ்ப்படியாத அந்த மக்களுக்காக நீர் அனுதாபப்படாதீர்!”

27

وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ ابْنَیْ اٰدَمَ بِالْحَقِّ ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ یُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ ؕ قَالَ لَاَقْتُلَنَّكَ ؕ قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِیْنَ ۟

(நபியே!) இனி, அவர்களுக்கு ஆதமுடைய இரு மகன்களின் வரலாற்றைக் கூடுதல் குறைவின்றி எடுத்துரைப்பீராக! அவர்கள் இருவரும் குர்பானி கொடுத்தபோது அவர்களில் ஒருவருடைய குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மற்றொருவருடையது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இரண்டா மவர், “திண்ணமாக நான் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று கூறினார். அதற்கு முதலாமவர் கூறினார்: “இறையச்சமுடையோரின் வழிபாடுகளை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்;

28

لَىِٕنْۢ بَسَطْتَّ اِلَیَّ یَدَكَ لِتَقْتُلَنِیْ مَاۤ اَنَا بِبَاسِطٍ یَّدِیَ اِلَیْكَ لِاَقْتُلَكَ ۚ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟

நீ என்னைக் கொல்வதற்குக் கை நீட்டினாலும் நான் உன்னைக் கொல்வதற்குக் கை நீட்ட மாட்டேன். நான் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே அஞ்சுகிறேன்.

29

اِنِّیْۤ اُرِیْدُ اَنْ تَبُوْٓاَ بِاِثْمِیْ وَاِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۚ وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟ۚ

என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்தையும் நீயே சேகரித்துக் கொண்டு நீ நரகவாசியாகி விடுவதை நான் விரும்புகின்றேன். இதுதான் அக்கிரமக்காரர்கள் புரிந்த கொடுமைக்குச் சரியான கூலியாகும்.”

30

فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَتْلَ اَخِیْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِیْنَ ۟

இறுதியில் தன்னுடைய சகோதரரைக் கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால் அவன் அவரைக் கொலை செய்து பேரிழப்பிற்கு ஆளாகிவிட்டான்.

31

فَبَعَثَ اللّٰهُ غُرَابًا یَّبْحَثُ فِی الْاَرْضِ لِیُرِیَهٗ كَیْفَ یُوَارِیْ سَوْءَةَ اَخِیْهِ ؕ قَالَ یٰوَیْلَتٰۤی اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِیَ سَوْءَةَ اَخِیْ ۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِیْنَ ۟

பிறகு அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டிற்று; அவனுடைய சகோதரனின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதனை அவனுக்குக் காண்பிப்பதற்காக! இதனைக் கண்ணுற்ற அவன், “அந்தோ, என் துயரமே! இந்த காகத்தைப் போன்றுகூட நான் இல்லையே! (அவ்வாறு இருந்திருந்தால்) என்னுடைய சகோதரருடைய சடலத்தை அடக்கம் செய்வதற்கான முறை எனக்குப் புலப்பட்டிருக்குமே! எனப் புலம்பினான். பின்னர், தான் செய்தது குறித்து அவன் பெரிதும் வருந்தினான்.

32

مِنْ اَجْلِ ذٰلِكَ ؔۛۚ كَتَبْنَا عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَیْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِی الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِیْعًا ؕ وَمَنْ اَحْیَاهَا فَكَاَنَّمَاۤ اَحْیَا النَّاسَ جَمِیْعًا ؕ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَیِّنٰتِ ؗ ثُمَّ اِنَّ كَثِیْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰلِكَ فِی الْاَرْضِ لَمُسْرِفُوْنَ ۟

இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர்.

33

اِنَّمَا جَزٰٓؤُا الَّذِیْنَ یُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا اَنْ یُّقَتَّلُوْۤا اَوْ یُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ یُنْفَوْا مِنَ الْاَرْضِ ؕ ذٰلِكَ لَهُمْ خِزْیٌ فِی الدُّنْیَا وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ

எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களுடைய மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவாகும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கிறது.

34

اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَیْهِمْ ۚ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

எனினும் உங்கள் பிடியில் நீங்கள் அவர்களைக் கொண்டு வருவதற்கு முன் எவர்கள் பாவமன்னிப்புக் கோரினார்களோ நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனும், மிகுந்த கருணை உள்ளவனுமாவான்.

35

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَیْهِ الْوَسِیْلَةَ وَجَاهِدُوْا فِیْ سَبِیْلِهٖ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவன் பக்கம் நெருங்கிச் செல்வதற்கான வழி வகையினைத் தேடுங்கள்; மேலும், அவனுடைய வழியில் கடுமையாகப் பாடுபடுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும்.

36

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لِیَفْتَدُوْا بِهٖ مِنْ عَذَابِ یَوْمِ الْقِیٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

நன்கு தெரிந்து கொள்ளுங்கள்: எவர்கள் நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கின்றார்களோ அவர்களிடம் பூமி முழுவதிலும் உள்ள செல்வம் அனைத்தும், அத்துடன் அதேபோல் இன்னொரு பங்கும் இருந்து அவற்றை மறுமைநாளின் வேதனையிலிருந்து (தாங்கள்) விடுபட ஈடாகக் கொடுக்க விரும்பினாலும் அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை கிடைத்தே தீரும்!

37

یُرِیْدُوْنَ اَنْ یَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنْهَا ؗ وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟

அவர்கள் நரகத்தை விட்டு ஓட நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அதை விட்டு வெளியேற முடியாது. மேலும், அவர்களுக்கு நிலையான வேதனை தரப்படும்.

38

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَیْدِیَهُمَا جَزَآءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினைமிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனும் ஆவான்.

39

فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ یَتُوْبُ عَلَیْهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

எனவே, யாரேனும் அநீதி இழைத்தபின் பாவ மன்னிப்புக்கோரி, தன்னைச் சீர்திருத்திக் கொண்டால் அல்லாஹ்வின் கருணைப் பார்வை அவன் பக்கம் மீண்டும் திரும்புகிறது. நிச்சயமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும் அளப்பரிய கருணையுள்ளவனுமாவான்.

40

اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

அல்லாஹ் வானங்கள், பூமி இவற்றின் ஆட்சிக்கு உரியவன் என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடுபவர்களை அவன் தண்டிப்பான்; மேலும் நாடுபவர்களை மன்னிப்பான்; அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.

41

یٰۤاَیُّهَا الرَّسُوْلُ لَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ مِنَ الَّذِیْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِیْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِیْنَ ۙ لَمْ یَاْتُوْكَ ؕ یُحَرِّفُوْنَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهٖ ۚ یَقُوْلُوْنَ اِنْ اُوْتِیْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ یُّرِدِ اللّٰهُ فِتْنَتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَمْ یُرِدِ اللّٰهُ اَنْ یُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ ۖۚ وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟

தூதரே! நிராகரிப்பில் முனைப்புடன் இருக்கின்றவர்கள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று வாயளவில் கூறிவிட்டு, உள்ளத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்களாயினும் சரி, அல்லது யூதர்களைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும் சரி! அவர்களின் நிலை எவ்வாறு உள்ளதென்றால் பொய்யுரைகளை அதிகமாகச் செவிமடுக்கின்றார்கள்; உங்களிடம் என்றுமே வந்திராத மற்றவர்களுக்காக இரகசியங்களைத் துப்பறிந்து கொண்டு திரிகின்றார்கள். இறைவேதத்தின் சொற்களை அவற்றிற்குரிய சரியான இடங்கள் வரையறுக்கப்பட்டிருக்க, அவற்றின் உண்மையான பொருளிலிருந்து மாற்றுகின்றார்கள். மேலும், அவர்கள் மக்களிடம் “உங்களுக்கு இன்ன கட்டளை கொடுக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லாவிடில் ஏற்க மறுத்து விடுங்கள்” என்று கூறுகின்றார்கள். ஒருவனைக் குழப்பத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டானாகில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்ற உம்மால் முடியாது. இவர்களுடைய உள்ளங்களைத் தூய்மை செய்ய அல்லாஹ் நாடவில்லை. இவர்களுக்கு இவ்வுலகிலும் இழிவுதான்; மறுமையிலும் கடும் தண்டனைதான் இருக்கின்றது.

42

سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَكّٰلُوْنَ لِلسُّحْتِ ؕ فَاِنْ جَآءُوْكَ فَاحْكُمْ بَیْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ ۚ وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ یَّضُرُّوْكَ شَیْـًٔا ؕ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَیْنَهُمْ بِالْقِسْطِ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟

அவர்கள், பொய்யுரைகளைச் செவியேற்பவர்களும் தடுக்கப்பட்ட பொருள்களை அதிகம் உண்பவர்களுமாவார்கள். எனவே, அவர்கள் உம்மிடம் (தமது வழக்குகளைச் சமர்ப்பிக்க) வந்தால் விரும்பினால் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கும், அல்லது மறுத்து விடுவதற்கும் உமக்கு உரிமை உண்டு; நீர் மறுத்து விட்டால் அவர்களால் எந்தத் தீங்கும் ஒருபோதும் உமக்குச் செய்து விட முடியாது. மேலும், தீர்ப்பு வழங்குவீராயின் அவர்களிடையே நீதியைக் கொண்டே தீர்ப்பு வழங்குவீராக! திண்ணமாக, அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.

43

وَكَیْفَ یُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰىةُ فِیْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ یَتَوَلَّوْنَ مِنْ بَعْدِ ذٰلِكَ ؕ وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟۠

மேலும், உம்மை நீதிபதியாக அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவர்களிடமோ அல்லாஹ்வின் சட்டங்கள் அடங்கிய தவ்ராத் இருந்த போதிலும் அவர்கள் அதனைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்களுக்கு நம்பிக்கை என்பதே இல்லை.

44

اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰىةَ فِیْهَا هُدًی وَّنُوْرٌ ۚ یَحْكُمُ بِهَا النَّبِیُّوْنَ الَّذِیْنَ اَسْلَمُوْا لِلَّذِیْنَ هَادُوْا وَالرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَیْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ ۟

திண்ணமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழி காட்டுதலும் ஒளியும் இருந்தது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் அடிபணிந்த நபிமார்கள் அனைவரும் அதைக் கொண்டே இந்த யூதர்(களின் விவகாரங்)களுக்குத் தீர்ப்பளித்து வந்தனர். அவ்வாறே ரப்பானிகளும், அஹ்பாரும்* (அதனைக் கொண்டே தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்)! ஏனெனில், அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். மேலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாகவுமிருந்தார்கள். எனவே (யூதக் கூட்டத்தாரே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்! மேலும், என்னுடைய திருவசனங்களை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள்! எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்பத் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்.

45

وَكَتَبْنَا عَلَیْهِمْ فِیْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِ ۙ وَالْعَیْنَ بِالْعَیْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ ۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ ؕ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟

அ(த் தவ்ராத்)தில் யூதர்கள் மீது “உயிருக்குப் பதில் உயிரும், கண்ணுக்குப் பதில் கண்ணும், மூக்குக்குப் பதில் மூக்கும், காதுக்குப் பதில் காதும், பல்லுக்குப் பதில் பல்லும் (இதே போன்று) காயங்களுக்கும் சமமான முறையில் பழிவாங்கப்படும்” என்று நாம் விதியாக்கியிருந்தோம். ஆயினும், யாரேனும் பழிவாங்காமல் மன்னித்து விட்டுவிடுவாராகில், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள்.

46

وَقَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِعِیْسَی ابْنِ مَرْیَمَ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ ۪ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ فِیْهِ هُدًی وَّنُوْرٌ ۙ وَّمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًی وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟ؕ

பிறகு அந்த நபிமார்களின் அடிச்சுவடுகளில் மர்யம் உடைய குமாரர் ஈஸாவை நாம் பின்தொடரச் செய்தோம். தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அவர்முன் (எஞ்சி) இருந்தனவோ அவற்றை அவர் மெய்ப்படுத்துபவராய் இருந்தார். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. இன்னும் தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அப்போது எஞ்சியிருந்தனவோ அவற்றை மெய்யென உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அது திகழ்ந்தது. மேலும், இறையச்சமுடையவர்களுக்கு முற்றிலும் நேர்வழி காட்டக் கூடியதாகவும், நல்லுரை யாகவும் அது இருந்தது.

47

وَلْیَحْكُمْ اَهْلُ الْاِنْجِیْلِ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فِیْهِ ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟

மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கட்டும் (என்பதே நம் கட்டளையாக இருந்தது)! மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள்தாம் ஃபாஸிக்கள் பாவிகளாவர்.

48

وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَیْمِنًا عَلَیْهِ فَاحْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَقِّ ؕ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ لِّیَبْلُوَكُمْ فِیْ مَاۤ اٰتٰىكُمْ فَاسْتَبِقُوا الْخَیْرٰتِ ؕ اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟ۙ

பிறகு (நபியே!) சத்தியத்தைத் தாங்கி வந்திருக்கும் இவ்வேதத்தை உம்மளவில் நாம் அனுப்பினோம். இது, அல்கிதாபின் அறிவுரைகளில் தன் முன்னே எவை எஞ்சி நிற்கின்றனவோ அவற்றை உறுதிப்படுத்தக்கூடியதாயும், அவற்றைப் பாதுகாக்கக் கூடியதாயுமிருக்கின்றது; எனவே, நீர் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப மக்களின் விவகாரங்களில் தீர்ப்பளிப்பீராக! மேலும், உம்மிடம் வந்திருக்கும் சத்தியத்தைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர் நாம் (மனிதர்களாகிய) உங்களில் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஷரீஅத்தையும் ஒரு செயல்வழியையும் அமைத்துத் தந்தோம். அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாகவும் ஆக்கியிருக்க முடியும்! ஆனால் அவன் உங்களுக்கு அளித்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காகத்தான் (இவ்வாறு செய்தான்). எனவே நன்மைகளில் ஒருவரையொருவர் முந்துவதற்கு முயற்சி செய்யுங்கள்! இறுதியில் நீங்கள் எல்லாரும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கின்றது. பிறகு நீங்கள் எவற்றைக் குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அவற்றின் உண்மை நிலையை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.

49

وَاَنِ احْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ یَّفْتِنُوْكَ عَنْ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَیْكَ ؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّصِیْبَهُمْ بِبَعْضِ ذُنُوْبِهِمْ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ ۟

எனவே (நபியே!) அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள்; அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்கள் உம்மைக் குழப்பத்திலாழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடா வண்ணம் நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! பிறகும் அவர்கள் இதனைப் புறக்கணித்தார்களாயின், அல்லாஹ் அவர்களுடைய சில பாவங்களின் காரணமாக அவர்களைத் துன்பத்திலாழ்த்திடவே நாடிவிட்டான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக அந்த மக்களில் பெரும்பாலோர் வரம்பு மீறியவர்களாவர்.

50

اَفَحُكْمَ الْجَاهِلِیَّةِ یَبْغُوْنَ ؕ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟۠

(அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்களென்றால்) பிறகு ஜாஹிலியத்தின்* தீர்ப்பினையா அவர்கள் விரும்புகிறார்கள்! ஆயினும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, அல்லாஹ்வைவிட நல்ல தீர்ப்பு வழங்கக்கூடியவன் யார்?

51

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْیَهُوْدَ وَالنَّصٰرٰۤی اَوْلِیَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உங்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் சிலர் சிலருக்கு நெருங்கிய நண்பர்களாய் இருக்கின்றனர். மேலும், உங்களில் எவரேனும் அவர்களைத் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொண்டால், அவரும் அவர்களைச் சார்ந்தவராகவே கணிக்கப்படுவார். திண்ணமாக, அல்லாஹ் அக்கிரமக்காரர்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை.

52

فَتَرَی الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یُّسَارِعُوْنَ فِیْهِمْ یَقُوْلُوْنَ نَخْشٰۤی اَنْ تُصِیْبَنَا دَآىِٕرَةٌ ؕ فَعَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَیُصْبِحُوْا عَلٰی مَاۤ اَسَرُّوْا فِیْۤ اَنْفُسِهِمْ نٰدِمِیْنَ ۟ؕ

எவருடைய உள்ளங்களில் நயவஞ்சகப் பிணி உள்ளதோ அத்தகையோர் அவர்களிடையிலேயே முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காண்கின்றீர். “ஏதேனுமொரு துன்பம் எங்களைப் பிடித்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகின்றோம்” என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ் தன்னிடமிருந்து (தீர்க்கமான) வெற்றியையோ ஏதேனுமோர் உதவியையோ அளித்துவிடக்கூடும்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்த (நயவஞ்சகத்)தைக் குறித்து வருந்துவார்கள்.

53

وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ ۙ اِنَّهُمْ لَمَعَكُمْ ؕ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِیْنَ ۟

அவ்வேளை இறைநம்பிக்கை கொண்டவர்கள் வினவுவார்கள்: “நாங்களும் உங்களோடுதான் இருக்கின்றோம் என்று பேரார்வத்துடன் கூறி, அல்லாஹ்வைக் கொண்டு மிக உறுதியான முறையில் சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தாமா?” (இறுதியில்) அந்நயவஞ்சகர்களுடைய எல்லாச் செயல்களும் வீணாகி விட்டன. மேலும், அவர்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.

54

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَنْ یَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَسَوْفَ یَاْتِی اللّٰهُ بِقَوْمٍ یُّحِبُّهُمْ وَیُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَی الْمُؤْمِنِیْنَ اَعِزَّةٍ عَلَی الْكٰفِرِیْنَ ؗ یُجَاهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَخَافُوْنَ لَوْمَةَ لَآىِٕمٍ ؕ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவரேனும் தனது தீனை நெறியை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்.) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்; நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

55

اِنَّمَا وَلِیُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رٰكِعُوْنَ ۟

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும்தாம் உண்மையிலேயே உங்களுக்கு உற்ற நண்பர்கள். (அந்த இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையோர் எனில்,) தொழுகையை நிலைநாட்டுவார்கள்; மேலும், ஜகாத்தை அளிப்பார்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வார்கள்.

56

وَمَنْ یَّتَوَلَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالَّذِیْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ ۟۠

எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொள்கின்றாரோ அவர் தெரிந்து கொள்ளட்டும்: ‘அல்லாஹ்வின் குழுவினர்தாம் வெற்றியாளர்கள்.’

57

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ اَوْلِیَآءَ ۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் உங்களுடைய தீனை (நெறியை) கேலிக்கும் விளையாட்டுக்கும் உரித்தாக்கிக் கொண்டார்களோ அவர்களையும், மற்ற நிராகரிப்பாளர்களையும் உங்களின் உற்ற நண்பர்களாய் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.

58

وَاِذَا نَادَیْتُمْ اِلَی الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟

மேலும், நீங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுத்தால், அதனை இவர்கள் கேலிக்கும் விளையாட்டுக்கும் உரியதாக எடுத்துக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம்: அவர்கள் அறியாத மக்களாய் இருப்பதேயாகும்.

59

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ هَلْ تَنْقِمُوْنَ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلُ ۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ ۟

நீர் அவர்களிடம் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்களுக்கு இறக்கியருளப்பட்ட அறிவுரைகள் மீதும், இன்னும் எங்களுக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகத்தான் எங்கள் மீது நீங்கள் வெறுப்புக் காட்டுகின்றீர்கள். மேலும், உங்களில் பெரும்பாலோர் தீயவர்களாகவே இருக்கின்றீர்கள்.”

60

قُلْ هَلْ اُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ؕ مَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَیْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِیْرَ وَعَبَدَ الطَّاغُوْتَ ؕ اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟

மேலும், கூறுங்கள்: “அல்லாஹ்விடத்தில் இ(த்தீய)வர்களின் கதியைவிட இன்னும் மோசமான கதியுடையோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” எவர்களை அல்லாஹ் சபித்தானோ, எவர்கள் மீது கோபம் கொண்டானோ, மேலும் எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றினானோ மேலும் எவர்கள் தாஃகூத்துக்கு அடிபணிந்தார்களோ அத்தகையவர்கள்தாம் அவர்களைவிட மிகவும் தரங்கெட்டவர்கள்; மேலும், அவர்கள் செம்மையான பாதையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றவர்கள் ஆவர்.

61

وَاِذَا جَآءُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا وَقَدْ دَّخَلُوْا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوْا بِهٖ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا كَانُوْا یَكْتُمُوْنَ ۟

அவர்கள் உங்களிடம் வரும்போது “நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆயினும் அவர்களோ இறைநிராகரிப்புடன்தான் வந்தார்கள்; இறைநிராகரிப்புடன்தான் திரும்பியும் சென்றார்கள். மேலும், (தம் உள்ளங்களில்) அவர்கள் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.

62

وَتَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یُسَارِعُوْنَ فِی الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

மேலும், அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், வரம்பு மீறிய செயல்களிலும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காணுகிறீர். அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்கள் எத்துணைத் தீமையானவை!

63

لَوْلَا یَنْهٰىهُمُ الرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟

தீய வார்த்தைகளைப் பேசுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலிருந்தும் அவர்களின் குருமார்களும் அறிஞர்களும் அவர்களை ஏன் தடுப்பதில்லை? வாழ்நாள் முழுவதும் இவர்கள் புரிந்து வரும் செயல்கள் எத்துணை மோசமானது!

64

وَقَالَتِ الْیَهُوْدُ یَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ؕ غُلَّتْ اَیْدِیْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ یَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ یُنْفِقُ كَیْفَ یَشَآءُ ؕ وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ؕ وَاَلْقَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙ وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟

யூதர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது.” கட்டப்பட்டிருப்பவை அவர்களுடைய கைகள்தாம். அவர்கள் பேசிக் கொண்டிருந்த இந்தப் பேச்சின் காரணமாக சாபத்திற்குள்ளானார்கள். அல்லாஹ்வின் கைகளோ விரிந்திருக்கின்றன. தான் நாடும் விதத்தில் அவன் அள்ளி வழங்குகின்றான். (உண்மை யாதெனில்) உம்முடைய இறைவனிடமிருந்து உம்மளவில் இறக்கிவைக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், அசத்தியப்போக்கையும் இன்னும் அதிகப்படுத்திவிட்டது. மேலும் (இதற்குத் தண்டனையாக) மறுமைநாள் வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பு உணர்ச்சியையும் நாம் விதைத்து விட்டோம். போர் நெருப்பை அவர்கள் மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். அவர்கள் பூமியில் குழப்பத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். (ஆனால்) இத்தகைய குழப்பவாதிகளை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.

65

وَلَوْ اَنَّ اَهْلَ الْكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

வேதம் அருளப்பட்டவர்கள் (இவ்வரம்பு மீறிய போக்கினைக் கைவிட்டு) இறைநம்பிக்கை கொண்டு, மேலும் இறையச்சத்துடன் செயல்பட்டிருந்தால், அவர்களின் தீமைகளை அவர்களை விட்டு நாம் அகற்றியிருப்போம். மேலும் அருட்கொடை நிரம்பிய சுவனங்களில் அவர்களை நுழையச் செய்திருப்போம்.

66

وَلَوْ اَنَّهُمْ اَقَامُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ مِّنْ رَّبِّهِمْ لَاَكَلُوْا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ ؕ مِنْهُمْ اُمَّةٌ مُّقْتَصِدَةٌ ؕ وَكَثِیْرٌ مِّنْهُمْ سَآءَ مَا یَعْمَلُوْنَ ۟۠

மேலும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் மற்றும் தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கியருளப்பட்ட இதர வேதங்களையும் அவர்கள் முழுமையாக நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்காக ஆகாரம் மேலிருந்தும் பொழிந்திருக்கும்; கீழிருந்தும் பொங்கிப் பெருகியிருக்கும். ஆயினும் அவர்களில் சிலர் நேர்மையாளர்களாய் இருக்கின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தீய செயல்கள் புரிபவர்கள் ஆவார்கள்.

67

یٰۤاَیُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهٗ ؕ وَاللّٰهُ یَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟

தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! நீர் அவ்வாறு செய்யாவிடில் அவன் வழங்கிய தூதுத்துவப் பொறுப்பை நிறைவேற்றியவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களின் தீங்கிலிருந்து காப்பாற்றுபவனாக இருக்கின்றான். (உங்களுக்கு எதிராக) நிராகரிப்போருக்கு வெற்றிக்கான பாதையை அல்லாஹ் ஒருபோதும் காண்பிக்க மாட்டான்.

68

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَسْتُمْ عَلٰی شَیْءٍ حَتّٰی تُقِیْمُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ ؕ وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ۚ فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟

“வேதம் அருளப்பட்டவர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட இதர வேதங்களையும் முழுமையாகச் செயல்படுத்தாதவரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று (நபியே!) தெளிவாய்க் கூறிவிடுங்கள். உம்மீது இறக்கி வைக்கப்பட்ட இந்த வேதக் கட்டளை அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், நிராகரிப்பையுமே இன்னும் அதிகப்படுத்தி விட்டது. ஆயினும் நிராகரிப்போரின் நிலை குறித்துச் சிறிதும் நீர் வருந்தாதீர்!

69

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـُٔوْنَ وَالنَّصٰرٰی مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

(இங்கு யாருக்கும் எதிலும் ஏகபோக உரிமை கிடையாது என்பதனை நன்கறிந்து கொள்ளுங்கள்.) முஸ்லிம்கள், யூதர்கள், ஸாபிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரில், யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.

70

لَقَدْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَاَرْسَلْنَاۤ اِلَیْهِمْ رُسُلًا ؕ كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُهُمْ ۙ فَرِیْقًا كَذَّبُوْا وَفَرِیْقًا یَّقْتُلُوْنَ ۟ۗ

உண்மையில் நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் (வலுவான) வாக்குறுதி வாங்கினோம். மேலும், அவர்களிடம் இறைத்தூதர்கள் பலரையும் அனுப்பினோம். (ஆயினும்) யாரேனும் ஒரு தூதர் அவர்களின் மனம் விரும்பாதவற்றை அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (தூதர்களில்) சிலரை அவர்கள் பொய்யர் எனத் தூற்றினர்; சிலரைக் கொலை செய்தனர்.

71

وَحَسِبُوْۤا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَیْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِیْرٌ مِّنْهُمْ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟

இதனால் எந்த ஃபித்னாவும் (குழப்பமும்) ஏற்படாது என்றும் தாங்களாகவே எண்ணிக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் குருடர்களாயும், செவிடர்களாயும் ஆகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களை மன்னித்தபோது அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அதிகமாக குருடர்களாயும் செவிடர்களாயும் ஆகிவிட்டனர். அவர்கள் செய்கின்ற எல்லாச் செயல்களையும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான்.

72

لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ وَقَالَ الْمَسِیْحُ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَیْهِ الْجَنَّةَ وَمَاْوٰىهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟

திண்ணமாக, “மர்யம் உடைய குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள் சந்தேகமின்றி நிராகரித்தவர்களாகிவிட்டார்கள். உண்மையில் மஸீஹ் இப்படித்தான் கூறியிருந்தார்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!” எவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ, அவனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்திருக்கின்றான். மேலும், அவனுடைய இருப்பிடம் நரகமாகும். மேலும், இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.

73

لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰهٌ وَّاحِدٌ ؕ وَاِنْ لَّمْ یَنْتَهُوْا عَمَّا یَقُوْلُوْنَ لَیَمَسَّنَّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

நிச்சயமாக, அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்களும் திண்ணமாக நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். உண்மையில் ஒரே இறைவனைத் தவிர வேறு எந்த இறைவனு மில்லை. தாம் இவ்வாறு கூறுவதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளவில்லையாயின், இத்தகைய நிராகரிப்பாளர்கள் அனைவர்க்கும் துன்புறுத்தும் தண்டனை கொடுக்கப்பட்டே தீரும்.

74

اَفَلَا یَتُوْبُوْنَ اِلَی اللّٰهِ وَیَسْتَغْفِرُوْنَهٗ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

(அவ்வாறிருக்க) அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு அவனிடத்தில் பாவமன்னிப்புக் கோரிட வேண்டாமா? மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும், மாபெரும் கருணையாளனும் ஆவான்.

75

مَا الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ وَاُمُّهٗ صِدِّیْقَةٌ ؕ كَانَا یَاْكُلٰنِ الطَّعَامَ ؕ اُنْظُرْ كَیْفَ نُبَیِّنُ لَهُمُ الْاٰیٰتِ ثُمَّ انْظُرْ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟

மர்யத்தின் குமாரர் மஸீஹ் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் இறைத்தூதர்கள் பலர் சென்றிருக்கிறார்கள். மேலும், அவருடைய அன்னை வாய்மையுள்ள ஒரு பெண்மணியாவார். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தார்கள். பாருங்கள்! நாம் (சத்தியத்திற்கான) சான்றுகளை எவ்வாறெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக்குகின்றோம். மீண்டும் பாருங்கள்; அவர்கள் எவ்வாறெல்லாம் உண்மையை விட்டுப் பிறழ்ந்து செல்கிறார்கள்.

76

قُلْ اَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ؕ وَاللّٰهُ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு இழப்பையோ லாபத்தையோ அளிப்பதற்கு சக்தியில்லாதவற்றையா நீங்கள் வணங்குகின்றீர்கள்? ஆனால் அல்லாஹ்தான் யாவற்றையும் செவியேற்பவனும் நன்கு அறிபவனும் ஆவான்.”

77

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ غَیْرَ الْحَقِّ وَلَا تَتَّبِعُوْۤا اَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِیْرًا وَّضَلُّوْا عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟۠

நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர் களே! உங்கள் தீனில் (நெறியில்) அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்! மேலும், உங்களுக்கு முன்னர் தாமும் வழிகெட்டு, பலரையும் வழிகெடுத்து மேலும், நேரிய வழியிலிருந்து தடம்புரண்டு போன மக்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்!”

78

لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟

இஸ்ராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். மேலும், இறைவரம்புகளை மீறியவாறு இருந்தார்கள்.

79

كَانُوْا لَا یَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟

தாம் செய்து கொண்டிருந்த தீய செயலிலிருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன.

80

تَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یَتَوَلَّوْنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَیْهِمْ وَفِی الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ ۟

இன்று அவர்களில் பெரும்பாலோர் (இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்பாளர்களுக்கு ஆதரவாளர்களாயும், உற்ற நண்பர்களாயுமிருப்பதை நீர் காண்கிறீர். சந்தேகமின்றி அவர்கள் தமக்காக சம்பாதித்தவை எத்துணைத் தரங்கெட்டவை! இதனாலேயே அல்லாஹ் அவர்கள் மீது கோபங் கொண்டான். மேலும் நிரந்தரமான வேதனைக்கு அவர்கள் பலியாவார்கள்.

81

وَلَوْ كَانُوْا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِیَآءَ وَلٰكِنَّ كَثِیْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟

உண்மையிலேயே அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதரின் மீதும் அவருக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின் (நம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்போரை தம் உற்ற நண்பர்களாய் ஒருபோதும் ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.

82

لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الْیَهُوْدَ وَالَّذِیْنَ اَشْرَكُوْا ۚ وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰی ؕ ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّیْسِیْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟

திண்ணமாக யூதர்களும், இணைவைப்பவர்களும் மற்ற அனைத்து மக்களையும் விட இறைநம்பிக்கையாளர்களுக்குக் கடும் பகைவர்களாக இருப்பதை (நபியே!) நீர் காண்பீர். நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களே என்று சொல்பவர்கள்தாம் மற்ற அனைவரையும்விட இறைநம்பிக்கையாளர்களுடன் நேசம் கொண்டிருப்பதை நீர் காண்பீர். இதற்குக் காரணம் அவர்களுள் வணக்கத்தில் திளைத்த அறிஞர்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், அவர்கள் அகந்தை கொண்டவர்களாகவும் இல்லை.

83

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَی الرَّسُوْلِ تَرٰۤی اَعْیُنَهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّ ۚ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟

இறைத்தூதர் மீது இறக்கியருளப்பட்ட இவ் வேதத்தை அவர்கள் செவியுறும்போது சத்தியத்தை அவர்கள் அறிந்து கொண்டதன் விளைவாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்கிறீர். மேலும், அவர்கள் இறைஞ்சுகின்றார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம். எனவே சாட்சி வழங்குபவர்களில் எங்கள் பெயர்களையும் எழுதி வைப்பாயாக!”

84

وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَآءَنَا مِنَ الْحَقِّ ۙ وَنَطْمَعُ اَنْ یُّدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِیْنَ ۟

மேலும், அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுடைய இறைவன் எங்களை ஒழுக்க நலமுடையவர்களோடு இணைத்தருள வேண்டுமென்று நாங்கள் பேராவல் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்த சத்தியத்தின் மீதும் எவ்வாறு நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்போம்?”

85

فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزَآءُ الْمُحْسِنِیْنَ ۟

அவர்கள் இவ்வாறு கூறியதால் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோட்டங்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே நன்மை புரிவோருக்கான கூலியாகும்.

86

وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟۠

மேலும் எவர்கள் நம் திருவசனங்களை நிராகரித்து, அவற்றைப் பொய்யானவை என வாதிட்டார்களோ அத்தகையோர் நரகவாசிகளே ஆவர்!

87

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَیِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூய பொருள்களை ஹராமானவை விலக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், வரம்பு மீறாதீர்கள்! திண்ணமாக வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

88

وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟

அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்டதும், தூய்மையானதுமான பொருள்களை உண்ணுங்கள் (பருகுங்கள்)! மேலும், எந்த இறைவன்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு இருக்கின்றீர்களோ அவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி வாழுங்கள்!

89

لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَیْمَانَ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِیْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِیْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِیْرُ رَقَبَةٍ ؕ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ ؕ ذٰلِكَ كَفَّارَةُ اَیْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ وَاحْفَظُوْۤا اَیْمَانَكُمْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிப்பதில்லை. ஆயினும் நீங்கள் உறுதிப்படுத்திச் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற்கான குற்றப்பரிகாரம் (இதுதான்): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து வறியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இவற்றில்) எதற்கும் சக்தி பெறாதவர்கள் மூன்று நாட்களுக்கு நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்து விட்டால், இதுதான் அவற்றுக்குரிய குற்றப்பரிகாரமாகும். எனவே உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள்! இவ்வாறு தன்னுடைய சட்ட திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்; நீங்கள் நன்றி செலுத்துபவராய்த் திகழக் கூடும் என்பதற்காக!

90

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَیْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّیْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

இறை நம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.

91

اِنَّمَا یُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّوْقِعَ بَیْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِی الْخَمْرِ وَالْمَیْسِرِ وَیَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ ۚ فَهَلْ اَنْتُمْ مُّنْتَهُوْنَ ۟

மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?

92

وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚ فَاِنْ تَوَلَّیْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் (மாறு செய்வதிலிருந்து) விலகியிருங்கள். இதனை (ஆணையை) நீங்கள் புறக் கணித்து விட்டால் (நமது தூதைத்) தெள்ளத் தெளிவாய் எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதர் மீது கடமையாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

93

لَیْسَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠

இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள், (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை. (ஆனால் இனி) தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும், இன்னும் எந்த எந்தப் பொருள்களைவிட்டு தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாகவும், மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும் இன்னும் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் நன்னடத்தையுடையோரை நேசிக்கின்றான்.

94

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَیَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَیْءٍ مِّنَ الصَّیْدِ تَنَالُهٗۤ اَیْدِیْكُمْ وَرِمَاحُكُمْ لِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّخَافُهٗ بِالْغَیْبِ ۚ فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! (இஹ்ராமுடைய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகள் ஏதாவதொன்றின் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். மறைவான நிலையிலும் தன்னை அஞ்சக்கூடியவர்கள் யார் என்று அல்லாஹ் அறிந்து கொள்வதற்காக! இவ்வாறு எச்சரித்த பிறகு யார் (அல்லாஹ் நிர்ணயித்த) வரம்பை மீறுகின்றாரோ அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.

95

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّیْدَ وَاَنْتُمْ حُرُمٌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ یَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْیًا بٰلِغَ الْكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِیْنَ اَوْ عَدْلُ ذٰلِكَ صِیَامًا لِّیَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ وَمَنْ عَادَ فَیَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! மேலும், உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி)ப் பிராணியைக் கொன்றுவிட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியைக் கால்நடைகளிலிருந்து பலி கொடுக்க வேண்டும். உங்களில் இரு நீதியாளர்கள் அதனைத் தீர்மானிக்க வேண்டும். அந்தப் பலிப் பிராணி கஅபாவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அல்லது (அச்செயலுக்கு) குற்றப்பரிகாரமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமாக அவர் நோன்பு நோற்க வேண்டும். தான் செய்த தீய செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவே (இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது). முன்பு செய்தவற்றையெல்லாம் அல்லாஹ் மன்னித்து விட்டான். எனவே யாரேனும் மீண்டும் அச்செயலைப் புரிந்தால், அல்லாஹ் அவரைப் பழிவாங்குவான். மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிவாங்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.

96

اُحِلَّ لَكُمْ صَیْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّیَّارَةِ ۚ وَحُرِّمَ عَلَیْكُمْ صَیْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

(இஹ்ராமுடைய நிலையில்) நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கும் பயணக்கூட்டத்தாருக்கும் பயன் தருவதற்காக கடல் வேட்டையும் அதனை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆயினும், நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் வரை தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. யார் முன்னிலையில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றீர்களோ அந்த இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழுங்கள்!

97

جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَیْتَ الْحَرَامَ قِیٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْیَ وَالْقَلَآىِٕدَ ؕ ذٰلِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

அல்லாஹ், கண்ணியமிக்க ஆலயமாகிய கஅபாவை மக்களுக்கு (அவர்களின் கூட்டு வாழ்க்கைக்கான) கேந்திரமாய் அமைத்தான். மேலும், சங்கைக்குரிய மாதத்தையும், பலி பிராணிகளையும் (அவற்றின் கழுத்தில் இடப்பட்ட) அடையாள மாலைகளையும் இதற்குத் துணை புரியக் கூடியனவாய் ஆக்கினான். எதற்கு எனில் நீங்கள் இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக! வானங்களில் உள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் அல்லாஹ் திண்ணமாக நன்கு அறிகின்றான்; மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

98

اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ؕ

இன்னும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் தண்டனையளிப்பதில் கடுமையானவன்; மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாகவும் மாபெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.

99

مَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟

தூதுச் செய்தியை எடுத்துரைப்பதே தூதரின் பொறுப்பாகும்; நீங்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும், மூடி மறைக்கின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான்.

100

قُلْ لَّا یَسْتَوِی الْخَبِیْثُ وَالطَّیِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِیْثِ ۚ فَاتَّقُوا اللّٰهَ یٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠

(நபியே!) நீர் அவர்களிடம் கூறிவிடும்: “தூய்மையானவையும், தூய்மையற்றவையும் ஒரு போதும் சமமாகமாட்டா. தூய்மையில்லாதவை பெருகிக்கிடப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே! எனவே அறிவுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டு விலகியே வாழுங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்.”

101

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَسْـَٔلُوْا عَنْ اَشْیَآءَ اِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ۚ وَاِنْ تَسْـَٔلُوْا عَنْهَا حِیْنَ یُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَكُمْ ؕ عَفَا اللّٰهُ عَنْهَا ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்கள் உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி நீங்கள் வினவாதீர்கள். ஆயினும் குர்ஆன் இறக்கியருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டு விடும். நீங்கள் (இதுவரை) கேட்டவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.

102

قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِیْنَ ۟

உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு கூட்டத்தார் இத்தகைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பிறகு அவற்றின் காரணமாகவே அவர்கள் நிராகரிப்பில் ஆழ்ந்து விட்டார்கள்.

103

مَا جَعَلَ اللّٰهُ مِنْ بَحِیْرَةٍ وَّلَا سَآىِٕبَةٍ وَّلَا وَصِیْلَةٍ وَّلَا حَامٍ ۙ وَّلٰكِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ وَاَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟

‘பஹீரா’, ஸாயிபா, வஸீலா, ஹாம்,* என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆயினும் நிராகரிப்போர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். மேலும், அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர்.

104

وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْلَمُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟

“மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த சட்டத்தின் பக்கமும், இறைத்தூதரின் பக்கமும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படுமாயின் “எங்கள் மூதாதையர் எவ்வழியில் வாழக்கண்டோமோ அவ்வழியே எங்களுக்குப் போதுமானது” என்று பதில் கூறுகிறார்கள். இவர்களின் மூதாதையர் எதையும் புரியாதவர்களாகவும், நேர்வழியைக் குறித்து எதையும் அறியாதவர்களாகவும் இருந்தாலுமா அவர்களை இவர்கள் பின்பற்றிச் செல்வார்கள்?

105

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلَیْكُمْ اَنْفُسَكُمْ ۚ لَا یَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَیْتُمْ ؕ اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது. அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.

106

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَیْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِیْنَ الْوَصِیَّةِ اثْنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرٰنِ مِنْ غَیْرِكُمْ اِنْ اَنْتُمْ ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِیْبَةُ الْمَوْتِ ؕ تَحْبِسُوْنَهُمَا مِنْ بَعْدِ الصَّلٰوةِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِیْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ۙ وَلَا نَكْتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِیْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவருக்கேனும் மரண வேளை நெருங்கி விட்டால், அவர் வஸிய்யத் மரண சாசனம் தரும் நேரத்தில் அதைப் பற்றிச் சாட்சியம் அளிப்பதற்கான விதிமுறை இதுவே; உங்களிடையே நீதமுள்ள இருவர் சாட்சிகளாக்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது மரண வேதனை உங்களுக்கு வந்துவிட்டால் உங்களைத் தவிர வேறு இருவரைச் சாட்சிகளாய் ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொள்வீர்களாயின் தொழுகைக்குப் பிறகு (பள்ளியில்) அவர்களை நீங்கள் தடுத்து வையுங்கள்! அவ்விருவரும் இறைவன் மீது ஆணையிட்டு (இவ்வாறு) கூறவேண்டும்: “நாங்கள் சொந்த லாபத்திற்காக சாட்சியத்தை விற்கமாட்டோம். மேலும், யாருக்காக சாட்சி சொல்கிறோமோ அவர் எங்கள் உறவினராக இருந்தாலும் சரியே! (அதற்காக அவருக்கு எந்தச் சலுகையும் காட்ட மாட்டோம்.) மேலும், அல்லாஹ்வுக்காக கூறும் சாட்சியத்தில் நாங்கள் எதையுமே மறைக்க மாட்டோம். அவ்வாறு செய்வோமாயின் திண்ணமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்.”

107

فَاِنْ عُثِرَ عَلٰۤی اَنَّهُمَا اسْتَحَقَّاۤ اِثْمًا فَاٰخَرٰنِ یَقُوْمٰنِ مَقَامَهُمَا مِنَ الَّذِیْنَ اسْتَحَقَّ عَلَیْهِمُ الْاَوْلَیٰنِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ لَشَهَادَتُنَاۤ اَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَیْنَاۤ ۖؗ اِنَّاۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟

ஆனால் அவ்விருவரும் (பொய் சாட்சியம் கூறி) பாவத்திற்கு ஆளாகி விட்டார்கள் என்று திண்ணமாக அறியப்பட்டால் உரிமை பாதிக்கப்பட்டவர்களிலிருந்து அதிகத் தகுதி வாய்ந்த வேறு இருவர் அவ்விருவருடைய இடத்தில் (சாட்சிகூற) நிற்க வேண்டும். மேலும், “எங்களுடைய சாட்சியம் திண்ணமாக அவ்விருவருடைய சாட்சியத்தை விட வாய்மையானது. நாங்கள் (சாட்சியங் கூறுவதில்) வரம்பு மீறவில்லை. அவ்வாறு வரம்பு மீறியிருந்தால் திண்ணமாக நாங்கள் கொடுமைக்காரர்களாகி விடுவோம்” என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூற வேண்டும்.

108

ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یَّاْتُوْا بِالشَّهَادَةِ عَلٰی وَجْهِهَاۤ اَوْ یَخَافُوْۤا اَنْ تُرَدَّ اَیْمَانٌ بَعْدَ اَیْمَانِهِمْ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠

மக்கள் சரியான முறையில் சாட்சியம் அளிப்பதற்கு அல்லது (குறைந்தபட்சம்) தம் சாட்சியங்களுக்குப் பிறகு (பிறர் சாட்சியம் அளித்து) தம் சாட்சியங்கள் மறுக்கப்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சி, (உண்மையாக) சாட்சி அளிப்பதற்கு இந்த வழிமுறைதான் அதிகப் பொருத்தமானதாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள்! அவனுக்கே செவிசாயுங்கள்! அல்லாஹ் (தனது கட்டளைக்கு) கீழ்ப்படியாதவர்களை நேர்வழிப்படுத்துவதில்லை.

109

یَوْمَ یَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَیَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ ؕ قَالُوْا لَا عِلْمَ لَنَا ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟

அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களையும் ஒன்று சேர்த்து, “உங்களு(டைய அழைப்பு)க்கு அளிக்கப்பட்ட மறுமொழி என்ன?” என்று கேட்கும் நாளில், “எங்களுக்கு எதுவும் தெரியாது. மறைவான உண்மைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவன் நீயே!” என்று அவர்கள் (பணிந்து) கூறுவார்கள்.

110

اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ اذْكُرْ نِعْمَتِیْ عَلَیْكَ وَعَلٰی وَالِدَتِكَ ۘ اِذْ اَیَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ ۫ تُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا ۚ وَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ بِاِذْنِیْ فَتَنْفُخُ فِیْهَا فَتَكُوْنُ طَیْرًا بِاِذْنِیْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِیْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰی بِاِذْنِیْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟

அல்லாஹ், இவ்வாறு கூறும் சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! நான் உமக்கும் உம்முடைய அன்னைக்கும் வழங்கியிருந்த அருட்கொடைகளை நினைவுகூரும். பரிசுத்த ஆன்மாவின் மூலம் உமக்கு நான் உதவி செய்திருந்தேன். (அதனால்) நீர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் உரையாடினீர்; மேலும், நான் உமக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுத் தந்திருந்தேன். மேலும், நீர் எனது கட்டளைப்படி களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதினீர். அது எனது கட்டளைப்படி (உயிருள்ள) பறவையாகிவிட்டது. நீர் பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் எனது கட்டளைப்படி குணப்படுத்தினீர். நீர் மரணித்தவர்களை எனது கட்டளைப்படி வெளிக்கொணர்ந்தீர். மேலும், நீர் இஸ்ராயீலின் வழித்தோன்றலிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுசென்ற போது, அவர்களில் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள் “இச்சான்றுகள் தெளிவான சூனியமே அன்றி வேறில்லை” என்று கூறிய வேளையில், அவர்களை விட்டும் நான் உம்மைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தையும் நினைத்துப் பாரும்!”

111

وَاِذْ اَوْحَیْتُ اِلَی الْحَوَارِیّٖنَ اَنْ اٰمِنُوْا بِیْ وَبِرَسُوْلِیْ ۚ قَالُوْۤا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّنَا مُسْلِمُوْنَ ۟

மேலும், “என்மீதும், என்னுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்!” என்று திருத்தொண்டர்களாகிய ஹவாரிகளுக்கு நான் உணர்த்தியபோது அவர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், நாங்கள் முஸ்லிம்கள் (முற்றிலும் அடிபணிந்தவர்கள்) என்பதற்கு நீ சாட்சியாக இருப்பாயாக!” என்று கூறினார்கள்.

112

اِذْ قَالَ الْحَوَارِیُّوْنَ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ هَلْ یَسْتَطِیْعُ رَبُّكَ اَنْ یُّنَزِّلَ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

ஹவாரிகள் (இவ்வாறு) கேட்டதையும் நினைவு கூரும்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! உம்முடைய இறைவனால் வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு இறக்கி வைக்க முடியுமா?” அதற்கு ஈஸா “நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பின், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று பதில் தந்தார்.

113

قَالُوْا نُرِیْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَىِٕنَّ قُلُوْبُنَا وَنَعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُوْنَ عَلَیْهَا مِنَ الشّٰهِدِیْنَ ۟

அதற்கு அவர்கள் “நாங்கள் விரும்புவது இவற்றை மட்டுமே: நாங்கள் அத்தட்டிலிருந்து புசிக்க வேண்டும். அதன் மூலம் எங்கள் உள்ளங்கள் நிம்மதி அடைய வேண்டும்; மேலும் நீர் எங்களிடம் கூறியவை அனைத்தும் உண்மையானவை என்று நாங்கள் அறிந்து அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்கள்.

114

قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَنَا عِیْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَةً مِّنْكَ ۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟

மர்யத்தின் குமாரர் ஈஸா “அல்லாஹ்வே! எங்கள் அதிபதியே! வானத்திலிருந்து எங்களுக்கு ஓர் உணவுத்தட்டை இறக்கி வைப்பாயாக! அது, எங்களுக்கும் எங்கள் காலத்தில் வாழ்பவர்களுக்கும் இனி வரக்கூடியவர்களுக்கும் மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பாகவும் மேலும், உன்னிடமிருந்து ஒரு சான்றாகவும் திகழட்டும்! மேலும், எங்களுக்கு ஆகாரம் வழங்குவாயாக! வழங்குவோரில் மிகச் சிறந்தவன் நீயே!” என்று இறைஞ்சினார்.

115

قَالَ اللّٰهُ اِنِّیْ مُنَزِّلُهَا عَلَیْكُمْ ۚ فَمَنْ یَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّیْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟۠

அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்கு அதனை இறக்கித் தருகிறேன். ஆனால், அதன் பின்னர் உங்களில் யாரேனும் நிராகரித்தால், அகிலத்தாரில் இதுவரை யாரையும் தண்டிக்காத அளவுக்கு அவரை நான் மிகவும் கடுமையாகத் தண்டிப்பேன்” என பதில் அளித்தான்.

116

وَاِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِیْ وَاُمِّیَ اِلٰهَیْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالَ سُبْحٰنَكَ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اَقُوْلَ مَا لَیْسَ لِیْ ۗ بِحَقٍّ ؔؕ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ؕ تَعْلَمُ مَا فِیْ نَفْسِیْ وَلَاۤ اَعْلَمُ مَا فِیْ نَفْسِكَ ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟

(ஆக இப்பேருதவிகளையெல்லாம் நினைவுபடுத்தி) அல்லாஹ் இவ்வாறு வினவுவான்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! ‘அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் அன்னையையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” (அப்போது) அவர் பணிந்து கூறுவார்: “தூய்மை அனைத்தும் உனக்கே! எனக்கு உரிமையில்லாதவற்றைக் கூறுவது என்னுடைய பணியல்ல. அவ்வாறு நான் கூறி இருந்தால் அதனை நிச்சயம் நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பவற்றை நீ அறிவாய்; ஆனால் உன் உள்ளத்திலிருப்பவற்றை நான் அறியமாட்டேன். திண்ணமாக மறைவான உண்மைகள் அனைத்தையும் நீ நன்கறிந்தவனாகவே இருக்கின்றாய்.

117

مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِیْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ۚ وَكُنْتُ عَلَیْهِمْ شَهِیْدًا مَّا دُمْتُ فِیْهِمْ ۚ فَلَمَّا تَوَفَّیْتَنِیْ كُنْتَ اَنْتَ الرَّقِیْبَ عَلَیْهِمْ ؕ وَاَنْتَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟

“என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே அடிபணியுங்கள்!” என்று நீ எனக்குக் கட்டளையிட்டதைத் தவிர வேறெதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய்! மேலும் நீ அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.

118

اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ ۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

(இப்போது) நீ அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடிமைகளே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்.”

119

قَالَ اللّٰهُ هٰذَا یَوْمُ یَنْفَعُ الصّٰدِقِیْنَ صِدْقُهُمْ ؕ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟

அப்போது அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மை பயனளிக்கக்கூடிய நாளாகும் இது. இத்தகையோருக்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் உண்டு. அங்கு அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும்.”

120

لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِیْهِنَّ ؕ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠

வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்புகளின் பேராட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான்!

PreviousAn-NisaNextAl-Anam

0:00–:––